Pages

Tuesday 12 May 2015

சிற்றிலக்கியங்கள்முதுகலை முதலாண்டு – முதல்பருவம்

 (2013-2014 கல்வியாண்டு முதல்)

அலகு-5
        அ.சேக்கிழார் பிள்ளைத்தமிழ்
           (தால,வருகை)
       ஆ.அபிராமி அந்தாதி

சேக்கிழார் பிள்ளைத்தமிழ் தாலப் பருவம்


1.      வெண்ணந் துரறி வயிறுளைந்து
          
வீற்று வீற்றாக் கருவுயிர்த்த
      
வெண்ணித் திலத்தை அரித்தெடுத்து
          
வெள்வாய்க் களமர் கரைகுவிக்க
      
வண்ணம் துவர்என் றுவமிக்கும்
          
வாய்ஓ திமம்நீர் குடைந்தெழுந்து
      
மற்றக் குவியல் மேல்இவர்ந்து
          
மருவி முதிரா வெயில்காயக்
      
கண்ணந் துறஉண் டெழுதரும்அக்
          
களமர் மராள முட்டையினைக்
      
கதிர்நித் திலமென் றுறக்குவித்தோம்
          
கடையேம் மயங்கி எனநாணும்
      
தண்ணம் துறைசேர் குன்றத்தூர்த்
          
தலைவா தாலோ தாலேலோ
      
சகலா கமபண் டிததெய்வச்
          
சைவா தாலோ தாலேலோ

    [ அ. சொ. ]  நந்து-சங்கு, உரறி-ஒலித்து, உளைந்து-நொந்து, வீற்று வீற்றா-வரிசை வரிசையாக, கருஉயிர்த்த-தன் கருவை ஈன்ற, நித்திலத்தை-முத்தை, அரித்து-சல்லடை கொண்டு சலித்து, களமர்-உழவர், வண்ணம்-நிறம், துவர்-பவழம், ஓதிமம்-அன்னம், குடைந்து-முழுகி, இவர்ந்து-ஏறி உட்கார்ந்து, மருவி-பொருந்தி, கள்-கள்ளை, நந்துற-செருக்குற, மராள-அன்னத்தின், கதிர்-ஒளியுடைய, கடையேம்-கடைப்பட்டவராயினோம், நாணும்-நாணுதற்குக் காரணமான, தண்ணந்துறை-குளிர்ந்த நீர்க்கட்டம், சகல ஆகம பண்டித-எல்லா ஆகமங்களையும் பயின்ற அறிஞரே.
விளக்கம் :  தால் என்பது நாக்கு.  அந்நாக்கை அசைத்து ஓசை எழுப்பிக் குழந்தைகளை உறங்க வைக்க முயலுவதால் இப்பருவம் தாலாட்டுப் பருவம் எனப்பட்டது.  இஃது எட்டாம் மாதத்தில் நிகழ்த்தும் செயல்.   “ எட்டாம் திங்களில் இயல் தாலாட்டும் “ என்பது பிங்கலந்தை.
    முத்துக்கள் பிறக்கும் இடம் பலவாகும்.  இதனை,

சிற்றிலக்கியங்கள்முதுகலை முதலாண்டு – முதல்பருவம்


அலகு-2

ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் - மதுரைக் கலம்பகம்

 
குமர குருபரரின் மதுரைக்கலம்பகம் காப்பு ஒன்றும், பாடல்கள் 102ம் கொண்டு அமைந்துள்ளது. மதுரைச் சொக்கநாதரின் பெருமைகளையும் திருவிளையாடல்புராண வரலாறுகளையும் இந்நூல் நயமுற எடுத்துரைக்கிறது.

சிற்றிலக்கியங்கள் முதுகலை முதலாண்டு – முதல்பருவம்



(2013-2014 கல்வியாண்டு முதல்)
அலகு-3 அழகர் கிள்ளை விடுதூது
 பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் இயற்றிய

அழகர் கிள்ளை விடுதூது

உள்ளடக்கம்
காப்பு
கிளியின் சிறப்புகள் (1-66)
உள்ளம் கவர்ந்த அழகரின் சிறப்புரைத்தல் (67-96)
இறைவனின் தசாங்கம் உரைத்தல் (97-123)
அழகரின் பெருமை உரைத்தல் (124-139)
அழகரை வணங்கி பேறு பெற்றவர் (140-142)
கோடைத் திருவிழாபற்றி விவரித்தல் (143-165)
தலைவி அழகரைக் கண்டு காமுற்றது பற்றி உரைத்தல் (166-171)
அழகர் காதலால் துயர் செய்வதாய்க் குற்றம் சாட்டுதல் (172-184)
அழகர் சோலைமலை திரும்பிவிட்டார் எனக் கூறல் (185-187)
கிளியிடம் தலைவி தன் விரக வேதனை உரைத்தல் (188-209)
அழகர் இருக்கும் இடம் (210-213)
அழகர் அவையில் இருப்போர் (214-229)
தூதுரைக்க வேண்டிய வேளை (230-235)
மாலை வாங்கிவர வேண்டல் (236-239)

காப்பு


தெள்ளு தமிழ்அழகர் சீபதி வாழ்வார் மீது
கிள்ளைவிடு தூது கிளத்தவே - பிள்ளைக்
குருகுஊரத் தானேசங்கு ஊர்கமுகில் ஏறும்
குருகூர் அத்தான் நேசம் கூர்.

சிற்றிலக்கியங்கள்முதுகலை முதலாண்டு – முதல்பருவம்



 (2013-2014 கல்வியாண்டு முதல்)
அலகு-4 குமரேச்சதகம்

குருபாத தாசர் அருளிய "குமரேச சதகம்"


காப்பு

பூமேவு புல்லைப் பொருந்துகும ரேசர்மேல்
தேமே வியசதகம் செப்பவே - கோமேவிக்
காக்கும் சரணவத்தான் கம்பகும்பத் தைந்துகரக்
காக்குஞ் சரவணத்தான் காப்பு.

அவையடக்கம்

திருக்கயிலாய ஞான உலா முதுகலை முதலாண்டு – முதல்பருவம்,



சிற்றிலக்கியங்கள் (2013-2014 கல்வியாண்டு முதல்) 
(அரசு கலைக் கல்லூரி சேலம்-7 மாணவர்களுக்குரியது) முதுகலை முதலாண்டு – முதல்பருவம், 
சேரமான் பெருமாள் நாயனார்

பெரியபுராண அடியவர்களில் ஒருவரும், சேரமன்னரும்,
சுந்தரமூர்த்தி சுவாமிகளின் நண்பருமான சேரமான் பெருமாள்
பாடிய மூன்று பனுவல்கள் அடுத்துப் பதினொராம்
திருமுறையுள் தொகுக்கப்பட்டுள்ளன. அவை