Pages

Tuesday 12 May 2015

சிற்றிலக்கியங்கள் முதுகலை முதலாண்டு – முதல்பருவம்



(2013-2014 கல்வியாண்டு முதல்)
அலகு-3 அழகர் கிள்ளை விடுதூது
 பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் இயற்றிய

அழகர் கிள்ளை விடுதூது

உள்ளடக்கம்
காப்பு
கிளியின் சிறப்புகள் (1-66)
உள்ளம் கவர்ந்த அழகரின் சிறப்புரைத்தல் (67-96)
இறைவனின் தசாங்கம் உரைத்தல் (97-123)
அழகரின் பெருமை உரைத்தல் (124-139)
அழகரை வணங்கி பேறு பெற்றவர் (140-142)
கோடைத் திருவிழாபற்றி விவரித்தல் (143-165)
தலைவி அழகரைக் கண்டு காமுற்றது பற்றி உரைத்தல் (166-171)
அழகர் காதலால் துயர் செய்வதாய்க் குற்றம் சாட்டுதல் (172-184)
அழகர் சோலைமலை திரும்பிவிட்டார் எனக் கூறல் (185-187)
கிளியிடம் தலைவி தன் விரக வேதனை உரைத்தல் (188-209)
அழகர் இருக்கும் இடம் (210-213)
அழகர் அவையில் இருப்போர் (214-229)
தூதுரைக்க வேண்டிய வேளை (230-235)
மாலை வாங்கிவர வேண்டல் (236-239)

காப்பு


தெள்ளு தமிழ்அழகர் சீபதி வாழ்வார் மீது
கிள்ளைவிடு தூது கிளத்தவே - பிள்ளைக்
குருகுஊரத் தானேசங்கு ஊர்கமுகில் ஏறும்
குருகூர் அத்தான் நேசம் கூர்.

கிளியின் சிறப்புகள்


கார்கொண்ட மேனிக் கடவுள் பெயர்கொண்டு
நீர்கொண்ட பாயல் நிறம்கொண்டு - சீர்கொண்ட .....1

வையம் படைக்கும் மதனையும் மேல் கொண்டு இன்பம்
செய்யும் கிளியரசே செப்பக்கேள் - வையம்எலாம் .....2

வேளாண்மை என்னும் விளைவுக்கு நின்வார்த்தை
கேளாதவர் ஆர்காண் கிள்ளையே - நாளும் .....3

மலைத்திடும் மாரன் ஒற்றை வண்டிலும் இல்லாமல்
செலுத்திய கால்தேரை முழுத்தேராய் - பெலத்து இழுத்துக் .....4

கொண்டுதிரி பச்சைக் குதிராய் உனக்கு எதிரோ
பண்டுதிரி வெய்யோன் பரிஏழும் - கண்ட .....5

செகம்முழுதும் நீ ஞானதீபமும் நீ என்று
சுகமுனியே சொல்லாரோ சொல்லாய் - வகைவகையாய் .....6

எவ்வண்ணமாய்ப் பறக்கும் எப்பறவை ஆயினும்உன்
ஐவண்ணத்துள்ளே அடங்குமே - மெய்வண்ணம் .....7

பார்க்கும்பொழுதில் உனைப் பார்ப்பதி என்பார் என்றோ
மூக்குச் சிவந்தாய் மொழிந்திடாய் - நாக்குத் .....8

தடுமாறுவோரை எல்லாம் தள்ளுவரே உன்னை
விடுவார் ஒருவர் உண்டோ விள்ளாய் - அடுபோர் .....9

மறம்தரு சீவகனார் மங்கையரில் தத்தை
சிறந்ததுநின் பேர்படைத்த சீரே - பிறந்தவர் .....10

ஆரும் பறவைகளுக்கு அச்சுதன் பேரும் சிவன்தன்
பேரும் பகர்ந்தால் பிழைஅன்றோ - நேர்பெறு வி .....11

வேகி ஒருகூடு விட்டு மறு கூடுஅடையும்
யோகி உனக்கு உவமை உண்டோ காண் - நீகீரம் .....12

ஆகையால் ஆடை உனக்கு உண்டே பாடகமும்
நீ கொள்வாய் கால்ஆழி நீங்காயே - ஏகாத .....13

கற்புடையாய் நீ என்றால் காமனையும் சேர்வாயே
அற்புடைய பெண்கொடி நீ ஆகாயோ - பொற்புடையோர் .....14

துன்னிய சாயுச்யம் சுகரூபம் ஆகையால்
அன்னது நின்சொரூபம் அல்லவோ - வன்னி .....15

பரிசித்த எல்லாம் பரிசுத்தம் என்றோ
உருசித்த உன்எச்சில் உண்பார் - துரிசு அற்றோர் .....16

இன்சொல்லைக் கற்பார் எவர்சொல்லும் நீகற்பாய்
உன்சொல்லைக் கற்கவல்லார் உண்டோகாண் - நின்போலத் .....17

தள்ளரிய யோகங்கள் சாதியாதே பச்சைப்
பிள்ளையாய் வாழும் பெரியோர்யார் - உள்உணர்ந்த .....18

மாலினைப் போல மகிதலத்தோர் வாட்டம்அறப்
பாலனத்தாலே பசி தீர்ப்பாய் - மேல் இனத்தோர் .....19

நட்டார் எனினும் நடந்துவரும் பூசைதனை
விட்டார் முகத்தில் விழித்திடாய் - வெட்டும் இரு .....20

வாள்அனைய கண்ணார் வளர்க்க வளர்வாய் உறவில்
லாளனைநீ கண்டால் அகன்றிடுவாய் - கேளாய் .....21

இருவடிவு கொண்டமையால் எங்கள் பெரிய
திருவடிகள் வீறுஎல்லாம் சேர்வாய் - குருவாய்ச் .....22

செப தேசிகர்க்கு எல்லாம் தென்அரங்கர் நாமம்
உபதேசமாக உரைப்பாய் - இபமுலையார் .....23

சித்தம் களிகூரச் செவ்விதழில் ஆடவர்போல்
முத்தம் கொடுக்க முகம் கோணாய் - நித்தம் அவர் .....24

செவ்விதழ்உன் மூக்கால் சிவந்ததோ உன்மூக்கில்
அவ்விதழின் சிவப்பு உண்டானதோ - செவ்வி இழந்து .....25

அண்டருக்குத் தோற்றான் அடல்வேள் ஆநானைநீ
கொண்டு இழுத்தால் ஆகும் குறைஉண்டோ - உண்டு அடக்கி .....26

ஆயுவை நீட்ட அருந்தவத்தோர் பூரகம்செய்
வாயுவைஉன் பின்னே வரவழைப்பாய் - தேயசு ஒளிர் .....27

மைப்பிடிக்கும் வேல்கண் மலர்மாதும் சங்கரியும்
கைப்பிடிக்க நீ வங்கணம் பிடித்தாய் - மெய்ப்பிடிக்கும் .....28

பச்சை நிறம் அச்சுதற்கும் பார்ப்பதிக்கும் உன்தனக்கும் .....29
இச்சைபெற வந்தவிதம் எந்தவிதம் - மெச்சும்

குருகே உன் நாக்குத்தான் கூழை நாக்கு ஆனது
அரி கீர்த்தனத்தினால் அன்றோ - தெரிவையர்கள் .....30

ஆர்த்த விரல் உன்முகம் ஒப்பாகையாலே கையைப்
பார்த்து முகம்அதனைப் பார்என்பார் - சீர்த்திக் .....31

கிரியையிலே காணுங்கால் கிள்ளை அடையாத
பெரியதனம் வீண்அன்றோ பேசாய் - தெரியும்கால் .....32

தேறுகனி காவேரி சிந்து கோதாவிரியும்
வீறுபெறுமே நீ விரும்பினால் - கூறில் அனம் .....33

உன்னுடைய ஊண்அன்றோ ஊதப் பறந்துபோம்
சின்ன வடிவன்றோ செழும்குயிலும் - என்னே .....34

முதுவண்டு இனந்தான் முடிச்சு அவிழ்த்தாலும்
மதுஉண்டாய் பின்னை வாயுண்டோ - எதிரும் .....35

கரும்புறா வார்த்தை கசப்பென்று சொல்ல
வரும் புறாவுக்கும் ஒரு வாயோ - விரும்புமயில் .....36

உற்ற பிணிமுகமே உன்போல் சுகரூபம்
பெற்ற பறவை பிறவுண்டோ - கற்று அறியும் .....37

கல்வியும் கேள்வியும் நீ கைக்கொண்டாய் சாரிகைக்குஉன்
செல்வம் அதில் அள்ளித் தௌித்தாயோ - சொல் வேதம் .....38

என் பரி நாலுக்கும் விதி சாரதி வில்வேள்
தன் பரியே உனக்குச் சாரதியார் - வன்போரில் .....39

மேவும் சிவன் விழியால் வேள்கருகி நாண்கருகிக்
கூவும் பெரிய குயில்கருகிக் - பாவம்போல் .....40

நின்று மறுப்படும்நாள் நீதான் நடுப்படையில்
சென்றும் மறுப்படாதே வந்தாய் - என்றும் மாக் .....41

காய்க்கும் கனிஅல்லால் காய்பூ என்றால் நாக்கும்
மூக்கு மறுப்பாய் முகம் பாராய் - ஆக்கம் .....42

வரையாமல் நன்மை வரத்தினை நல்கும்
அரிதாளை நீ விட்டு அகலாய் - இருகை .....43

உனக்குஇல்லை உன்சிறகு இரண்டும் எனக்கில்லை
எனக்கும் உனக்கும் பேதம் ஈதே - மனைக்குள் .....44

இதமாய் மனிதருடையனே பழகுவாய் அன்பு
அதனால் முறையிட்டு அழைப்பாய் - மது உண்டு .....45

அளிப்பிள்ளை வாய்குழறும் ஆம்பரத்தில்ரேறிக்
களிப்பிள்ளைப் பூங்குயிலும் கத்தும் - கிளிப்பிள்ளை .....46

சொன்னத்தைச் சொல்லுமென்று சொல்லப் பெயர் கொண்டாய்
பின் அத்தைப் போலும் ஒரு பேறுண்டோ - அன்னம் இன்றிப் .....47

பால்குடிக்கும் பச்சைக் குழந்தை நீ ஆனாலும்
கால்பிடிப்பார் கோடிபேர் கண்டாயே - மால்பிடித்தோர் .....48

கைச்சிலை வேளால் வருந்தும் காமநோய் தீர்ப்பதற்கோ
பச்சிலை ரூபம் படைத்து இருந்தாய் - அச்ச .....49

மனப் பேதையார் மால்வனம் சுடவோ வன்னி
எனப் பேர் படைத்தாய் இயம்பாய் - அனத்தை .....50

நிலவோ என்பார்கள் நெடுந்துயர் வேழத்தைக்
கொலவோ அரிவடிவம் கொண்டாய் - சிலை நுதலார் .....51

கொள்ளை விரகக் கொடும்படையை வெல்லவோ
கிள்ளை வடிவு எடுத்தாய் கிற்பாய் நீ - உள்ளம் .....52

மிகஉடை மாதர் விதனம் கெடவோ
சுகவடிவு நீ கொண்டாய் சொல்லாய் - தகவு உடைய .....53

தத்தை அடைந்தவர் ஏதத்தை அடையார் என்னும்
வித்தை அடைந்தாய் உனையார் மெச்சவல்லார் - முத்தமிழோர் .....54

மாரதி பாரதியார்க்கு உன்னை உவமானிப்பார்
ஆர்அதிகம் ஆர்தாழ்வு அறைந்திடாய் - ஊர்அறிய .....55

நெய்யில் கைஇட்டாலும் நீதான் பசுமையென்றே
கையிட்டுச் சுத்தீகரிக்கலாம் - மெய்யின் .....56

வடிவும் வளைந்த மணிமூக்கும் மாயன்
கொடியில் இருப்பவர் தம் கூறோ - நெடிய மால் .....57

விண்டு தறித்து ஊது வேணு கானத்தினிலே
பண்டு தழைத்த பசுந்தழையோ - கொண்ட சிறகு .....58

அல்இலங்கு மெய்யானை அன்று அழித்து வீடணன் போய்த்
தொல் இலங்கை கட்டு புதுத்தோரணமோ - நல்வாய் .....59

மழலை மொழிதான் மணிவண்ணன் செங்கைக்
குழலின் இசைதானோ கூறாய் - அழகுக் .....60

கிளிப்பிள்ளாய் தெள்ளமுதக் கிள்ளாய் நலங்குக்
குளிப்பிள்ளாய் இன்ப ரசக் குஞ்சே - வளிப்பிள்ளை .....61

தன்னைத் தாய போல் எடுத்துச் சஞ்சரிக்கும் சம்பத்தாய்
பின்னைத்தாய் கையில்உறை பெண் தத்தாய் - பொன்ஒத்தாய் .....62

முத்திநகர் ஏழில்ஒன்றே முத்தமிழ் வல்லாறில் ஒன்றாய்
ஒத்த தனித் தவ்வரிப் பேர் உற்றது ஒன்றே சுத்தம் உறும் .....63

ஐந்து பூதத்தில் ஒன்றே ஆனபடை நான்கில் ஒன்றே
முந்து முதலான பொருள் மூன்றில் ஒன்றே - வந்த .....64

இரு பயனில் ஒன்றே இமையே விழியே
பருவ விழியில் உறை பாவாய் - ஒருநாரில் .....65

ஏற்றும் திருமலை எய்தப்போய் ஊரெல்லாம்
தூற்றுமலர் கொண்டகதை சொல்லக்கேள் - தோற்றி .....66

அழகர் சிறப்பு


அரிவடிவுமாய்ப் பின்னரன் வடிவுமாகிப்
பெரியது ஒரு தூணில் பிறந்து - கரிய .....67

வரைத் தடந்தோள் அவுணன் வன்காயம் கூட்டி
அரைத்து இடும்சேனை அருந்தி - உருத்திரனாய்ப் .....68

பண்ணும் தொழிலைப் பகைத்து நிலக்காப்பும் அணிந்து
உண்ணும் படிஎல்லாம் உண்டுஅருளி - வெண்ணெய் உடன் .....69

பூதனை தந்தபால் போதாமலே பசித்து
வேதனையும் பெற்று வௌிநின்று - பா தவத்தை .....70

தள்ளுநடை இட்டுத் தவழ்ந்து விளையாடும்
பிள்ளைமை நீங்காத பெற்றியான் - ஒள் இழையார் .....71

கொல்லைப் பெண்ணைக் குதிரைஆக்கும் திருப்புயத்தான்
கல்லைப் பெண் ஆக்கும் மலர்க் காலினான் - சொல் கவிக்குப் .....72

பாரம் முதுகுஅடைந்த பாயலான் விண்ணவர்க்கா
ஆரமுது கடைந்த அங்கையான் - நாரியுடன் .....73

வன்கானகம் கடந்த வாட்டத்தான் வேட்டுவர்க்கு
மென்கால் நகங்கள் தந்த வீட்டினான் - என் காதல் .....74

வெள்ளத்து அமிழ்ந்தினோன் வேலைக்கு மேல் மிதந்தோன்
உள்ளத்து உள்ளான் உலகுக்கு உப்பாலன் - தெள்ளிதின் .....75

வெட்ட வெறுவௌியிலே நின்றும் தோற்றாதான்
கிட்ட இருந்தும் கிடையாதான் - தட்டாது என் .....76

எண்ணிலே மாயன்எனும் பேரினால் ஒளிப்போன்
கண்ணன் எனும்பெயரால் காண்பிப்போன் எண்ணுங்கால் .....77

எங்கும் இலாதுஇருந்தே எங்கும் நிறைந்து இருப்போன்
எங்கும் நிறைந்து இருந்தே எங்கும் இலான் - அங்கு அறியும் .....78

என்னை எனக்கு ஒளித்து யான் என்றும் காணாத
தன்னை எனக்கு அருளும் தம்பிரான் - முன்னைவினை .....79

கொன்று மலமாயைக் கூட்டம் குலைத்து என்னை
என்றும் தனியே இருத்துவோன் - துன்று பிர (மா) .....80

மாவும்நான் மன்னுயிரும் நான் அவ்விருவரையும்
ஏவுவான் தானும் நான் என்று உணர்த்தக் - கோவலர்பால் .....81

ஆனும்ஆய் ஆன்கன்றுமாகி அவற்றை மேய்ப்
பானும்ஆய் நின்ற பரஞ்சோதி - மாநகரப் .....82

பேர்இருள் நீக்கப் பெருந்தவம் வேண்டா உடலில்
ஆருயிர் கூட்ட அயன் வேண்டா - பாரும் எனச் .....83br>
சங்கத் தொனியும் தடங்குழல் ஓசையெனும்
துங்கத் தொனியும் தொனிப்பிப்போன் - பொங்கும் அலை .....84

மோதும் பரன் ஆதிமூலம் இவன் என்றே
ஓதும் கரி ஒன்று உடைய மால் - மூதுலகைத் .....85

தந்திடுவோனும் துடைப்போன் தானும் நான் என்று திரு
உந்தியால் வாயால் உரைத்திடுவோன் - பைந்தமிழால் .....86

ஆதிமறை நான்கையும் நாலாயிரத்து நற்காவிய
ஓதும் பதினொருவர் உள்ளத்தான் - பாதம் எனும் .....87

செந்தாமரை மலரில் சிந்திய தேன்போல
மந்தாகினி வழியும் வண்மையான் - சந்ததமும் .....88

ஆன்ற உலகம் அறிவும் அறியாமையுமாத்
தோன்றத் துயிலாத் துயில் கொள்வோன் - ஈன்றவளைத் .....89

தெள்ளு மணிவாயில் காட்டிச் செகம்புறமும்
உள்ளும் இருப்பது உணர்வித்தோன் - கொள்ளைக் .....90

கவற்சிதறு சென்மக் கடலில் கலந்த
அவிச்சை உவர்வாங்க முகில் ஆனோன் - நிவப்பா .....91

மடங்கும் பரசமய வாத நதி வந்து
அடங்கக் கருங்கடலும் ஆனோன் - உடம்பில் .....92

புணர்க்க ஒரு கிரணம் போலும் எனையும் கொண்டு
அணைக்க மணிநிறமும் ஆனோன் - பணைக்கும் .....93

விசைப் பூதல ஊசன் மீதில் இருப்போனும்
அசைப்போனும் தான்ஆகும் அண்ணல் - இசைத்து இசைத்து .....94

ஊன் பிடிக்கும் வேடர் ஒருபார்வையால் நூறு
மான் பிடிக்கின்ற வகை என்னத் - தான் படைத்த .....95

என்பிறவி எண்பத்துநான்கு நூறாயிரமும்
தன் பிறவி பத்தால் தணித்திடுவோன் - முன்பு புகழ்ந்து .....96

பத்து அங்கங்கள்


அழகர் மலை

ஏத்தி இருவர் நீங்காது இருக்கையாலே கேச
வாத்திரி என்னும் அணிபெற்று - கோத்திரமாம் .....97

வெம் காத்திரம்சேர் விலங்கு களை மாய்த்திடலால்
சிங்காத்திரி என்னும் சீர்மருவி - எம்கோமான் .....98

மேய்த்த நிரை போல வெற்புகழ் எல்லாம் சூழ
வாய்த்த நிரையில் ஒரு மால் விடையாய்ப் - பார்த்திடலால் .....99

இன்னியம் ஆர்க்கும் இடபகிரி என்னும் பேர்
மன்னிய சோலை மலையினான் - எந்நாளும் .....100

சிலம்பாறு

பொற்சிலம்பில் ஓடும் சாம்பூநதம் போல் மாணிக்க
நற்சிலம்பில் ஓடும் நதியாகிக் - கல் சிலம்பில் .....101

இந்திரன் போலும் இடபாசலம் அவன்மேல்
வந்த விழி போலும் வாளச்சுனைகள் - முந்துதிரு .....102

மாலுடைய தோளின் மணிமார்பின் முத்தாரம்
போல வரு நூபுரநதியான் - சீலம் உறு .....103

தென்பாண்டி நாடு

பன்னிரு செந்தமிழ்சேர் நாடுகளும் பார்மகளுக்கு
முன்இருகை காது முலை முகம் கால் - பின்னகம்கண் .....104

காட்டும் அவற்றுள் கனகவரை மீது புகழ்
தீட்டும் புனல்நாடும் தென்நாடும் - நாட்டமாம் .....105

அந்நாடு இரண்டில் அருள்சேர் வலக்கண் எனும்
நல்நாடாம் தென்பாண்டி நாட்டினான் - பொன் உருவச் .....106

திருமாலிரும்சோலை எனும் ஊர்

சந்த்ர வடிவாம் சோமச்சந்திர விமானத்தை
இந்திர விமானம் இது என்றும் - மந்த்ர விரு(து) .....107

துக்கொடி ஏறு துசத்தம்பம் வல்லிசா(த)
தக்கொடி ஏறு கற்பதாறு என்றும் - மிக்கோர்க்கு .....108

ஒரு வாழ்வு ஆனோனை உபேந்திரனே என்றும்
திருமலை ஆண்டானைத் தேவ - குருஎன்றும் .....109

நண்ணிய சீர்பெற்ற நம்பி முதலோரை
விண்ணவர்கோன் ஆதி விபுதர் என்றும் - எண்ணுதலால் .....110

ஆர்பதியான அமராபதி போலும்
சீர்பதியான திருப்பதியான் - மார்பு இடத்தில் .....111

துளசி மாலை

எண்ணும் கலன் நிறத்தோடு இந்திரவில்போல் பசந்த
வண்ணம் தரும்துளப மாலையான் - உள்நின்று .....112

அத்வைதம் எனும் யானை

உருக்கும் வயிணவமாம் ஓங்கும் மதம் பொங்கத்
திருக்கொம்புதான் துதிக்கை சேர - நெருக்கிய .....113

பாகம்ஒத்த வைகானந்தம் பாஞ்சராத்திரமாம்
ஆகமத்தின் ஓசை மணிஆர்ப்பெடுப்ப - மோகம்அறு .....114

மட்டும் பிணிக்கும் வடகலையும் தென்கலையும்
கட்டும் புரசைக் கயிறாக - விட்டுவிடா .....115

ஆனந்தமான மலர்த்தாள் கண்ட அத்துவி(த)
ஆனந்தம் என்ற களியானையான் - தான் அந்த .....116

வேதப்புரவி

வர்க்கத்துடன் எழுந்து வாயி னுரைகடந்து
கற்கி வடிவு நலம் காண்பித்துச் - சொர்க்கத்தில் .....117

ஏறும் கதி காட்டி எய்தும் அணுத் தோற்றி
வீறும் பலகலையும் வென்றுஓடி - ஆறு அங்கம் .....118

சாற்றிய தன்அங்கமாய்க் கொண்டு தாரணியில்
போற்றிய வேதப் புரவியான் - பாற்கடலில் .....119

கருடக்கொடி

புக்கதுஒரு மந்தரமும் பூமியும் பம்பரமும்
சக்கரமும் போலத் தலைசுழன்று - தொக்க விசை .....120

வற்றும் பொழுது விழ வாசுகியைச் சேடனைப்
பற்றும் கருடப் பதாகையான் - சுற்றிய தன் .....121

மும்முரசு

குன்றில் அரியும் கரியும் கொண்மூவும் நின்று அதிர
முன்றில் அதிர் மும்முரசினான் - என்றும் .....122

ஆணை

அவன் அசையாமல் அணு அசையாது என்னும்
தவநிலை ஆணை தரித்தோன் - நவநீதம் .....123

இறைவனின் உடல்

மேனியில் சிந்தியதும் மென்கையில் ஏந்தியதும்
வானில் உடுவும் மதி ம்எனத் - தான் உண்டோன் .....124

செங்கதிரும் வெண்கதிரும் என்னத் திருவிழியும்
சங்கமும் சக்கரமும் தாங்கினோன் - அங்கண் உலகு .....125

உலகும் இறைவனும்

உண்ட கனிவாயான் உறையும் திருவயிற்றான்
கொண்டபடி ஈன்ற கொப்பூழான் - மண்டி .....126

அளந்த திருத்தாளான் அன்று ஏற்ற கையான்
விளைந்த பொருள் காட்டும் மெய்யான் - உளம்கொண்டு .....127

இடந்த மருப்பினான் ஏந்து முதுகான்
படந்தனில் வைத்த மணிப்பாயான் - தொடர்ந்தவினை .....128

முட்டு அறுக்கும் தன்நாமம் உன்னித் திருநாமம்
இட்டவருக்கு ஈவோன் இகபரங்கள் - எட்டு எழுத்தால் .....129

பிஞ்செழுத்தாய் நையும் பிரமலிபி என்னும் பேர்
அஞ்சு எழுத்தை மூன்று எழுத்து ஆக்குவோன் - வஞ்சம் அறத் .....130

தங்கள் குன்று எங்கிருந்தும் சங்கரன் ஆதியோர்
நங்கள் குன்று ஈது என்னவரு நண்புஉடையோன் - அங்கு ஓர் .....131

வயமுனிக்குக் கண்இரண்டும் மாற்றினோன் போற்றும்
கயமுனிக்குக் கண்கொடுத்த கண்ணன் - நயம் உரைக்கின் .....132

அஞ்சுபடையோன் எனினும் அஞ்சாமல் அங்கையில் வா
சம்செய்யும் உத்யோகச் சக்கரத்தான் - எஞ்சாது .....133

விண்நலம்கொள் பொன்இலங்கை வெற்றியாய்க் கொண்டாலும்
மண்ணில் அங்கைத் தானமாய் வாங்குவோன் - பண் இலங்கும் .....134

ஏர்அணி பொன் அரங்கத்து எம்பிரான் போல் எவர்க்கும்
தார்அணி நல்காத தம்பிரான் - கார் அணியும் .....135

செங்கைத் தலத்து இடத்தும் தென்மதுரை ஊர் இடத்தும்
சங்கத்து அழகன் எனும் தம்பிரான் - எங்கும் .....136

திருப்பாது உதைக்கும் செழும் கருடனுக்கும்
திருப்பாதுகைக்கும் அரசு ஈந்தோன் - விருப்பமுகம் .....137

சந்திரன் ஆன சவுந்திரவல்லி உடன்
சுந்தரராசன் எனத் தோன்றினோன் - அந்தம் .....138

சொல நலங்கொள் தோள் அழகால் சுந்தரத் தோளன் மலை அலங்காரன் என் வந்தோன் - பலவிதமாய் .....139

வழிபட்டவர்கள்


நண்ணிய தெய்வத்தை நரர்எல்லாம் பூசித்த
புண்ணியமே தன்னைவந்து பூசித்தோன் - கண் அனைய .....140

பாத கமலம் பரவு மலயத்துவசன்
பாதக மலம் பறித்திடுவோன் - கோதுஇல் .....141

அரணாம் புயங்கள் உறும் அம்பரீடற்குச்
சரணா அம்புயங்கள் தருவோன் - திருநாளில் .....142

கோடைத் திருவிழா


சந்தக்கா ஊடு தவழ்ந்து வரும் தென்றல்கால்
மந்தக் காலாக மருவும்கால் - சிந்திக்கும் .....143

வாடைத் துளிபோல் மலர்த்தேன்துளி துளிக்கும்
கோடைத் திருவிழாக் கொண்டுருஅளி - நீடு விடைக் .....144

மதுரை

குன்றில் உற்ற வெள்ளம் கொழுந்துஓடி வையைதனில்
சென்று எதிர்த்து நிற்பதுஎனச் சீபதியோர் - அன்று எதிர்த்துக் .....145

கூடலின் கூடல்எனும் கூடல் திருநகரில்
ஏடு அலர் தாரான் எழுந்துஅருளி - ஆடல்உடன் .....146

தல்லாகுளம்

கல்லாகு உளங்கள் கரையப் பணிவார்முன்
தல்லாகுளம் வந்து சார்ந்து அருளி - மெல்ல .....147

வையை

நரலோகம் மீது நடந்து வருகின்ற
பரலோகம் என்று சிலர் பார்க்கச் - சுரலோகத்து .....148

இந்த்ர விமானம் இது என்றும் இது சோமச்
சந்த்ர விமானமே தான் என்றும் - முந்திய அட்ட .....149

ஆங்க விமானம் அவை இரண்டும் எனவே
தாங்கு விமானம் தனில் புகுமுன் - தீங்குஇலார் .....150

உன்னி விமானம் உரத்து எடுக்கும் போது அனந்தன் சென்னி மணி ஒன்று தெறித்து எழுந்தது - என்னவே .....151

உம்பரில் வெய்யோன் உதயம் செயக் குதிரை
நம்பிரான் ஏறி நடந்துஅருளி - அம்பரத்தில் .....152

கோடி கதிரோனும் கோடி பனிமதியும்
ஓடி நிறையா உதித்த என - நீடிய .....153

பொன் கொடியும் வெள்ளிக்குடையும் பொலிந்து இலங்க
வில் கொடிகள் விண்ணோர் வெயர் துடைப்பச் - சொற்கத்து .....154

இயலும் கரியும் அதில் எற்று முரசும்
புயலும் உருமேறும் போலக் - கயலினத்தை .....155

அள்ளும் திரைவையை ஆறுள் பரந்து நர
வெள்ளம் கரை கடந்து மீதூர - வள்ளல் .....156

திருத்தகு மேகம்போல் செல்லுதலால் நீர்தூம்
துருத்தி மழைபோல் சொரியக் - கருத்துடனே .....157

வாட்டம் அற வந்து வரம் கேட்கும் அன்பருக்குக்
கேட்ட வரம் ஊறும் கிணறுபோல் - நாட்டமுடன் .....158

காணிக்கை வாங்கி அன்பர் கைகோடி அள்ளிஇடும்
ஆணிப்பொன் கொப்பரை முன்னாக வரக் - காணில் .....159

புரந்தரற்கு நேர்இது என்று போற்றிஇசைப்ப ஓர்ஆ
யிரம் திருக்கண் வையைநதி எய்தி - உரம் தரித்த .....160

வண்டியூர் மண்டபம்

வார்மண்டு கொங்கை மனம்போல் விலங்கு வண்டி
யூர் மண்டபத்தில் உவந்து இருந்து - சீர்மண்டு .....161

16
மாயனுக்கு வாகனமாய் வாஎன்று சேடனைத்தான்
போய்அழைக்க வெய்யோன் புகுந்திடலும் - தூயோன் .....162

மருளப் பகலை மறைத்தவன் இப்போது
இருளைப் பகல் செஇதான் என்னத் - தெருளவே .....163

அங்கிக் கடவுளும் வந்து அன்பருடன் ஆடுதல்போல்
திங்கள் கடவுள் சேவிப்பது போல் - கங்குல் .....164

கரதீபமும் வாணக் காட்சியும் காண
வர தீபரூபமாய் வந்த - திருமால் .....165

தலைவி அழகரைக் காணல்


அவனி பரிக்கும் அனந்தஆழ்வான் மீது
பவனி வரக்கண்டு பணிந்தேன் - அவன் அழகில் .....166

பின்னழகு முன்னழகுஆம் பேரழகைக் காணும் முன்னே
முன்னழகைக் கண்டே நான் மோகித்தேன் - பின்னழகு .....167

தானே கண்டாலும் தனக்குத் துயர் வரும் என்று
ஏனோரை நோக்கி எழுந்து அருள - ஆனோன் .....168

விமலத் திருமுகமும் மென்மார்பில் மேவும்
கமலத் திருமுகமும் கண்டேன் - அமலன் .....169

அரவணையான் என்பதும் உண்டு அண்ணல் அரன்போல
இரவு அணையான் என்பதும் உண்டு ஏனும் - பரவைத் .....170

திருஅணையான் என்றுதினம் செப்புவது பொய்என்று
உருவஅணையும் மாதர்க்கு உரைத்தேன் - மருஅணையும் .....171

தலைவி அழகரிடம் தன் நிலை உரைத்தல்


செங்கரத்தில் அன்று திருடிய வெண்ணெய் போலச்
சங்கு இருக்க என்சங்குதான் கொண்டீர் - கொங்கை .....172

மலைஅருவி நீர்உமக்கு மால் இரும்சோலைத்
தலைஅருவி நீர்தானோ சாற்றீர் - விலை இலாப் .....173

பொற்கலை ஒன்று இருந்தால் போதாதோ அன்றுபுனை
வற்கலையிலே வெறுப்பு வந்ததோ - நற்கலைதான் .....174

ஆரம்சேர் கொங்கைக்கு அளித்தது அறியீரோ
சோரம் திரும்பத் தொடுத்தீரோ - ஈரம்சேர் .....175

நூலாடையாம் எங்கள் நுண்ஆடைதாம் உமக்குப்
பாலாடை ஆமோ பகருவீர் - மால்ஆகி .....176

மொய்த்து இரையும் எங்கள் மொழி கேளீர் பாற்கடலில்
நித்திரை தான் வேகவதி நீரில் உண்டோ - இத்தரையில் .....177

பொங்கு நிலா வெள்ளம் பொ ருந்திற்றோ பாற்கடல்தான்
அங்கு நிலாதுஉம்மோடு அணைந்ததோ - கங்குல் எனும் .....178

ஆனை கெசேந்திரன் ஆகில் அதன்மேல் வருவன்
மீனையும் விட்டு விடலாமோ - கானச் .....179

சதிர் இளமாதர் தாமக்கு இரங்கு வீர் நெஞ்சு
அதிர் இளமாதர்க்கு இரங்க ஒணாதோ - முதிர்கன்றைக் .....180

கொட்டத்து வெண்பால் குனிந்து கறப்பார் முலையில்
விட்டுக் கறப்பதையும் விட்டீரோ - கிட்டப்போய் .....181

மென்பால் தெறித்த வியன்முலையைப் பால்குடம் என்று
அன்பால் எடுத்தது அறியீரோ - மின்போல்வார் .....182

செவ்விதழின் மேலே தெறித்த வெண்ணெய் உண்பதுபோல்
அவ்விதழை உண்டது அயர்த்தீரோ - செவ்வி தழை .....183

குன்றுஅன்று எடுத்தீர் குளிரும் அமுதம் கடைந்தீர்
சென்று அன்று பாம்பின் நடஞ் செய்தீரே - என்று என்று .....184

தேனூரில் இருந்தருளியபின் அழகர் சோலைமலை திரும்புதல்


கொண்ட பஞ்சாயுதன் மேல் கொள்கை பெறத் தேனூர்
மண்டபம் சார்வாய் வலம்கொண்டு - பண்டை .....185

விரசையுடன் வைகுந்த வீடும் இது என்னப்
புரசைமலை காத்தோன் புகுந்தான் - வரிசை .....186

உபசாரம் கொண்டு அருளி ஓர்சிவிகை மீது
தபசுஆர் அம்சீபதியைச் சார்ந்தான் - இபம் உண்ட .....187

தலைவியின் காதல் வேதனை


வெள்ளில்கனி ஆனேன் வேதனை ஈன்றவன்தான்
உள்ளில் கனியானே ஊர்ந்துவரும் - பிள்ளைமதி .....188

செவ்வை மதியோ திரைக் கடல் வாய் சிறிதோ
கொவ்வை இதழார் மொழிதான் கூற்று அன்றோ - எவ்வம் உறும் .....189

கால்தேரினானும் ஒரு காலன்அன்றோ உருக்கி
ஊற்றாத சேமணியும் ஒன்று உண்டோ - வேற்றுக் .....190

கிளையோடு வாடிக் கிடந்தாலும் சுட்டுத்
துளையாக் குழலும் உண்டோ சொல்லாய் - கிளிஅரசே .....191

கிளியை வேண்டல்

என்கூடு பொன்கூடும் இந்த நிறத்தினால்
உன்கூடும் என்கூடும் ஒன்றுகாண் - என்கூட்டில் .....192

மாங்கனி உண்டு வளம்சேர் செழும் கொவ்வைத்
தீங்கனி உண்டு ஆசினிஉண்டு - பாங்கில் .....193

குழையுமன முண்டு குழம்பிய பாலுண்டு
உழையே தௌிபாலும் உண்டு - விழைவு அறிந்து .....194

ஊட்டுவேன் உன்னை உருப்பசியாய் என்ன நலங்
காட்டுவேன் பட்டாடையால் துடைப்பேன் - கூட்டில் .....195

அரசாய் இருத்தி ஆலத்தி எடுத்துப்
புரைதீர் நறையும் புகைப்பேன் - அருகே .....196

இளவெயிலில் காய்வித்து எடுத்து ஒருகால் முத்தி
வளைபயில் கையின்மேல் வைத்துத் - துளபம் அணி .....197

ஈசன் திருநாமம் எல்லாம் என்போல் உனக்குப்
பாசம் தொலையப் பயிற்றுவேன் - பேசுஎன்றே .....198

பிறபொருட்கள் தூதுக்குப் பயன்படா என்றல்

ஈடுபட்ட வெள்ளை எகினத்தைத் தூதுவிட்டால்
சூடுபட்டார் துணிந்து சொல்வாரோ - கூடுகட்டி .....199

அன்பாய் வளர்த்த தாயார்க்கு உதவாக் கோகிலம் தான்
என்பால் அருள்வைத்து இயம்புமோ - தன்பேர் .....200

அரிஎன்று சொன்னால் அளிஎன்று சொல்லும்
வரிவண்டு பேசி வருமோ - விரகம்செய் .....201

வன்கால திக்கின் மலைவாய் இருக்கின்ற
தென்காலும் என்காதல் செப்புமோ - பொன்காதல் .....202

வண்டு அலையும் தாரான்முன் மாதரை எல்லாம் தூற்றும்
கொண்டலையும் தூதுவிடக் கூடுமோ - உண்ட .....203

படிஏழும் காக்கும் பரங்கருணையான் முன்
கொடியோரும் போவாரோ கூறாய் - அடியார்கள் .....204

கிளியின் தகுதி

அங்கு இருந்தால் கீர்த்தனம் செய்வாய் அடுத்த நாச்சியார்
பங்கு இழிந்தால் கையில் பறந்து இருப்பாய் - எங்குஇருந்து .....205

வந்தாய் என்றால் மாலிரும் சோலையினில் இருந்து
எந்தாய் உனைத் தொழ வந்தேன் என்பாய் - அந்த .....206

சவுந்தரவல்லி எனும் தற்சொரூபிக்கும்
உவந்து அலர்சூடிக் கொடுத்தாளுக்கும் - சிவந்த .....207

கடுகு இலேசம் கோபம் காணாமல் என்மால்
வடுகிலே சொல்வாய் வகையாய் - அடுகிலே (சம்) .....208

சம்கெடுப்பாய் சங்குஎடுக்கும் சச்சிதானந்தர் அணி
கொங்கு எடுக்கும் தாமம் கொடுவருவாய் - அங்கு அடுக்கின் .....209

இறைவன் இருக்குமிடத்தின் அடையாளம்


ஓர்உகத்தில் ஆலாகி ஓருகத்திலே அரசாய்
ஓர் உகத்திலே வில்லுவம் ஆகி - ஓர் உகத்தில் .....210

புத்திரதீபமும் ஆய்ப் பங்கவர்க்கு ஆறாம் தருவாய்ச்
சத்திதரும் ஓர் தருஉண்டு - மொய்த்த .....211

ஒருகோடி காஉண்டு ஒருகோடி ஆறுண்டு
ஒருகோடி பூஞ்சுனையும் உண்டு - திறம்சேர் .....212

அறம்காக்கும் யோகிகள்போல் அல்லும் பகலும்
உறங்காப்புளி தானும் உண்டு - திறம்சேர் .....213

அவையில் உள்ளோர்


பிதாமகனோடு உறையும் பெற்றி விளங்கப்
பிதாமகன் வந்து புகழ் பேசச் - சதா கால(மும்) .....214

மும்திரமாய் வாழும் உபேந்திரன் அங்கில்லைஎன
இந்திரனார் வந்துஅங்கு இனிது இறைஞ்சப் - பிந்திய .....215

தம்பியர் மூவருக்கும் தானே அரசு ஈந்த
நம்பி திருத்தாளை நம்பினோர் - வெம்பிற வித் .....216

தேகம் பவித்திரம் செய்சீரங்கராச பட்டர்
ஆகும் ப்ரசித்தராம் அர்ச்சகரும் - மோகம்உறும் .....217

கங்குல் மலமாயை கன்மம் விளங்காமல்
செங்கையில் ஓங்கு திரிதண்டு ஏந்திச் - சங்கை அறச் .....218

செய்யும் திருமாலிருஞ்சோலைச் சீயர் என
வையம் விளங்கவரு மாதவரும் - பொய்யில்லா .....219

ஞானதீபம் காட்டி நன்னெறி காட்டு என்று ஒருப
மான தீபம் காட்டி வந்துநின்று - மேல்நாளில் .....220

முத்தமிழ்க்குப் பின்போவார் முன்போகப் பின்போன
அத்தன் திருமலை ஆண்டானும் - பத்தியினால் .....221

வையம் கார்வண்ணனையே வாழ்த்த வரும் தோழப்ப
ஐயங்கார் என்னும் ஆசாரியரும் - மெய் அன்பாம் .....222

சிட்டர்கள் தேவர்களாகத் தினம் பரவும்
பட்டர்களாம் வேதபாரகரும் - விட்டு எனும் .....223

சோதி கருணைக்கடல் தோன்றிக் கரசரண்
ஆதியுடன் வந்த அமுதாரும் - மூதுலகில் .....224

தண்அம் துழாய் அழகன் தங்கும் திருமலைபோல்
நண்ணும் திருமலை நம்பிகளும் - உள்நின்ற .....225

மாலை மலை சோலைமலையையே நம்புதலால்
சோலைமலை நம்பி என்னும் தூயோரும் - மேலை .....226

விரிஞ்சன் முதலோர்க்கும் விட்டுப் பிரசாதம்
தரும் சடகோபநம்பி தாமும் - பெரும்சீர் .....227

வரிஎழுதிக் கற்ற திருமாலிருஞ்சோலைப்
பிரியர் எனும் சீர் கருணப் பேரும் - கிரியில் இருந்து .....228

ஆளும் கடவுள் அருளே துணையாய் எந்
நாளும் சீகாரியம் செய் நாயகரும் - தாள்வணங்க .....229

தூது உரைக்க வேண்டிய வேளை


ஆர்த்த திருவோலக்கமாய் இருப்பன் அப்பொழுது உன்
வார்த்தை திருச்செவியில் வாயாது - சேர்த்தியிலே .....230

மெல்ல எழுந்தருளும் வேளைபார்த்து அவ்வேளை
சொல்ல எழுந்து ஒருவர் சொல்லாமுன் - வெல்லும் மதன் .....231

அம்புஅலர் தூற்ற அடர்த்து வரும்முன்னே
வம்பலர் தூற்ற வருமுன்னே - கும்பமுனி .....232

வாயில் நுரை அடங்க வந்த கடல் அடங்கத்
தாயின் உரை அடங்கத் தத்தையே - நீ உரையாய் .....233

உன்பேர் சுவாகதம் என்று ஓதுகையால் உனக்கும்
அன்பு ஏர் சுவாகதம் உண்டாகும் காண் - முன்பு ஒருநாள் .....234

கோசலை கையில் குருசில் உனைப் புகழ்ந்து
பேசின் உனைப் புகழ்ந்து பேசார் ஆர் - நேசமுடன் .....235

மாலையைக் கேள்


எம்முடைய மாலை இருபுயத்து மாலைகேள்
உம்முடைய மாலை உதவீரேல் - அம்மை திருக் .....236

கோதையார் சூடிக் கொடுத்து வரவிட்ட
தாதையார் மாலைதனைத் தம்மின் என்பாய் - நீதி .....237

அடுப்பவர் யாவர்க்கும் ஆடித் தியாகம்
கொடுப்பவன் இல்லை என்று கூறான் - தடுக்கும் .....238

அருமாலை நீக்கும் அழகன் புயத்து
மருமாலை நீ வாங்கி வா .....239

 விளக்கமும் வனா விடைகளும்

அழகர் கோடைத் திருவிழாவிற்பவனிவரக் கண்டு மயல் கொண்டு வருந்திய தலைவி யொருத்தி, தான் வளர்த்தகிளியை நோக்கித் தன் வரலாறு கூறி 'அழகர்பாற்சென்று மாலை வாங்கி வா' வென்று கூறித் தூது விடுத்ததாக ஆசிரியர் பொருளமைத்திருக்கின்றார். கிளி்யின் மாண்பினைஅத்தலைவி கூறி விளிப்பது முதற் பகுதி. அழகர் என்ற பாட்டுடைத்தலைவர்மாண்புரைத்து, அரசர்க்குரிய பத்து அங்கங்களையும் எடுத்துக் கூறுவது அடுத்த பகுதி,கோடைத் திருவிழாவில் அழகர் பவனிவந்த சிறப்பினை விரித்துரைப்பது மூன்றாம்பகுதி.  நான்காம்  பகுதிதலைவி  தன்னிலைமையைக்  கிளிக்குணர்த்துவதும்
தூதுரைக்குந்தகுதியுடையை நீயே எனப் புகழ்வதும் அழகர் அமர்ந்திருக்கும் இடமும்அமையமுங் கூறித் தூதுரைத்துத் தொடையல் வாங்கி வருகவென விடுப்பதும்எடுத்துரைக்கின்றது.
கிளியை விளித்தல்   கிளியின் சிறப்புகள்
   தலைவி கிளியை நோக்கிக் "கிளியரசே! நீ திருமால் பெயராகிய அரி என்றபெயரைப் பெற்றனை; அவர் படுத்துறங்கும் ஆலிலையின் பச்சை நிறமுங்கொண்டனை; மன்மதனுக்குப் பரியாகி அவனையும் மேற்கொண்டாய்; எல்லார்க்கும்இன்பஞ் செய்கின்றாய்; எல்லாரும் காதல் விளைந்த போது உன் சொல்லையே கேட்கவிரும்புகிறார்கள்; சூரியன் பச்சைக் குதிரைகள் ஏழும் கூடி ஒற்றைச் சக்கரத்தையுடைய
தேரை அருணன் என்னும் பாகன் செலுத்த இழுத்துச் செல்கின்றன. நீயோசக்கரமில்லாத காற்றாகிய மன்மதன் றேரைப் பாகனுமி்ன்றித் தனியே இழுத்துச் செல்கின்றாய்; அக்குதிரைகள் ஏழும் உனக்கிணையாகுமோ?
சுகம் என்பது நின் பெயர். அப்பெயர் அமைந்த முனிவர் பிறந்தபோதேஞானியாயினர். கிளி வடிவங்கொண்ட தாய் வயிற்றிற் பிறந்ததும், சுகம் என்ற பெயர்அமைந்ததும், அவர் ஞானியாவதற்குக் காரணம் அன்றோ? ஐந்து வண்ணம்அமைந்தவையே எல்லாப் பறவைகளும், கிளிகளில் ஒவ்வொன்றிற்கு ஐந்து வண்ணமும்
உண்டு. பறவைகளெல்லாம் கிளிக்குலமாகிய உன் குலத்துள் அடங்கும்.பார்ப்பதிபோலப் பச்சை நிறமுடையாய் மூக்குமட்டுஞ் சிவந்துள்ளது. வாய்குழறிப்பேசுவோரை ஒருவரும் மதியார் ; நீ வாய்குழறிப் பேசினும் மதிக்கின்றனர் ! என்னகாரணமோ? சீவகன் மனைவியரிற் காந்தருவதத்தை மிகவுஞ் சிறப்புடையள் ; அவள்சிறப்படைவதற்குத் தத்தை என்ற உன் பெயரே காரணம் ஆம். உனக்குத் திருமால்பெயரும் சிவன் பெயரும் கற்பித்தால் கற்றுச் சொல்வாய் ; மற்றப் பறவைகட்குக்கற்பித்தாற் பயன் யாது?
யோகி தன் கூட்டைவிட்டு வேறு கூட்டிற் புகுகின்றான் ;அவனுயி்ர் மட்டும் கூட்டிற் புகுகின்றது ; நீயோ உடம்புடனே வேறு கூட்டிற்புகுகின்றாய். யோகியிலும் நீ சிறந்த யோகியாவாய். உனக்குக் கீரம் என்று ஒருபெயருண்டு ; அச்சொல் பால் என்ற பொருளையும் தரும். ஆகையால், உனக்கு ஆடையுடுத்துவர், பாடகம் காலாழி பூட்டுவார் ; நீயும் ஒரு பெண்கொடி போலிருப்பாய்,சுகவடிவு கொண்டது சாயுச்சிய பதவி. அப்பதவி உன் பெயரமைந்த பதவியல்லவோ?உனக்கு வன்னியென்பது பெயர்; அது நெருப்பிற்கும் பெயராயமைந்துள்ளது.நெருப்பிற்பட்ட பொருள் எல்லாம் தூய்மையுடையனவாம் என்று கருதியோ உன் வாய்எச்சிற்பட்ட பழங்களை எல்லாம் இனியனவெனக் கருதி எடுத்துண்கின்றனர்!உன்னைப்போலப் பேசவல்லவர் ஒருவருமிலர். யோகப்பயிற்சியின்றியே என்றும்பச்சைப் பிள்ளையாயிருக்கின்றனை நீ; திருமாலைப்போல நீ பாலனத்தாற் பசிதீர்ப்பாய்; பூசையை விட்டவர் முகத்தில் விழிக்கமாட்டாய் ; மாதர் வளர்க்க வளர்வாய்;உறவில்லாளனைக் கண்டால் அகல்வாய். கருடன்போல இருவடிவு கொண்டாய்;அரங்கர் பெயரையே யுரைப்பாய் ;

ஆடவர், மகளிர் மனமகிழ வாய்முத்தங் கொடுப்பதுபோல நீயுமவர்கட்கு முத்தங்கொடுக்க முகம்கோணாய். முத்தங்கொடுத்ததனால் அவர் வாயிதழ்ச் சிவப்பு ஒட்டியதுபோல உன்மூக்குச் சிவந்துள்ளது ஒருவருக்குந் தோன்றா வுருவமுடைய மதனை நீ இழுத்துத்திரிகின்றாய். உனக்குக் குறையுளதோ? இல்லை. வாயுவும் உன் பின்னே வருகின்றது.திருமகளும் பார்வதியும் உன்னைச் செங்கையி்ற் பிடிக்க அவர்கட்கும் நட்பாயினை,பார்ப்பதி நிறமும் திருமால் நிறமும் நின் நிறமும் பச்சையாக வந்தவிதம் எந்தவிதமோ?

மாதர் விரலின் நகம் உன் மூக்குப்போல இருப்பதால்தான் கையைப்பார்த்துப் பின்கண்ணாடியைப் பார்க்கும் வழக்கம் பண்டைக்காலமுதல் தோன்றியதுபோலும்கிளையில்லாப் பெருஞ்செல்வம் பயன்படுமோ? நீ விரும்பிப் பற்றினால் மாம்பழம்பெருமைபெறும். பற்றாத பழம் அழுகிச் சாறு வடிந்து சக்கையாகப் போம். அன்னம்உன்னுடைய உணவு. குயில் சின்ன வடிவுடையது. வண்டு முடிச்சவிழ்தது மதுவுண்டாற்பின்பு மயங்கும். கரும்புறாவும் பேச வாயுடையதோ? இல்லை. மயில் பிணிமுகம் என்றபெயருடையது. ஆதலால் நின்போலச் சுகவடிவுள்ளது அன்று. நீ கல்விகேள்வியுடையாய். உன் செல்வத்திற் சிறிது அள்ளித் தெளித்தனைபோலும்நாகணவாய்ப் பறவைக்கு ; அதுவும் சிறிது பேசுகின்றது. காமன் சிவன்மேற் போர்க்குச்சென்று நெற்றிக்கண்ணெருப்பால் வெந்து கருகினான். அவன் வில் நாணாகிய வண்டுங்கருகி நிறங் கருப்பாயிற்று. சின்னமாகிய குயிலும் கருகி நிறங் கருப்பாயிற்று. நீதான்மறுப்படாமற் பச்சையாக வந்தாய்போலும். மாம்பழம் கண்டால் விரும்புவாய் ; காய்பூவைக் கண்டால் முகத்தை அவற்றின் பக்கம் திருப்பாமற் செல்லுவாய். தினையரிந்ததாளை வி்ட்டு நீங்காமலிருப்பாய். மனிதருடன் பழகுவாய். எல்லாரையும் முறைகூறியழைப்பாய். வண்டு வாய் குழறும் ; குயில் மாமரத்திலிருந்து கத்தும் ; கிளிப்பிள்ளைசொன்னதைச் சொல்லும் என்று யாவரும் சொல்லும்படி நற்பேர் பெற்றாய். நீ பால்குடிக்கும் பச்சைக்குழந்தையாயினும் நின் கால் பிடிப்பார் கோடி பேர் இருப்பார்.காமநோய் தீர்க்கும் பச்சிலை மருந்துபோல உன் உருவம் காணப்படுகிறது. காமமயக்கமாகிய காட்டை எரிப்பதற்காக நீ வன்னி எனப் பெயர்பெற்று வந்தனையோ?


காமம் என்ற யானையைக் கொல்லவோ அரி எனப் பேர்பெற்றாய்? விரகம் என்னும்
படையை வெல்லவோ கிள்ளையெனப் பேர் பெற்றாய்? மாதர் துன்பங்கெடுக்கவோ சுகம் என்ற பேர் பெற்றாய்? உன்னைச் சேர்ந்தவர் துயரம் அடைவாரோ? இரதி கலைமகள் இவர்களுக்கு உன்னை உவமையாகக் கூறுவர் புலவர் என்றால் நீதானே அவர்களினும் உயர்வுடையை ; மாயன் கொடியிலிருக்கும் கருடன் வடிவே உன்வடிவம். உன் சிறகுகள் கண்ணன் குழலூதிய காலத்துத் தழைத்த பசுந்தழையின்
நிறமோ அல்லது இராமன் இராவணனை யழித்தபோது வீடணன் சென்று புதிதாக இலங்கையிற் கட்டிய தோரணமோ? நீ பேசுமொழிதான் கண்ணன்வேய்ங்குழலிசையோ? கிளிப்பிள்ளையே! கிள்ளையே! அவந்திகையே! தத்தையே!வன்னியே! அரியே! சுகமே! இமையே! விழியே! விழியிலுறை பாவையே!" என்று
விளிக்கின்றாள்.
பாட்டுடைத் தலைவன் புகழ்ச்சி
 நரசிங்க வடிவமாய்த் தூணிற்றோன்றி இரணியன் என்ற அசுரனை உடலைப் பிளந்துகொன்றவன் ; நிலக்காவல் பூண்டவன் ; பூமி முழுவதையும் உண்டவன்; பூதனையென்றபேய்ப்பாலைப் பருகியவன். உரலிற் கட்டப்பட்டுச் சென்று மருதமரங்களை முறித்தவன்.கிள்ளைத்தன்மை நீங்காதவன்; திருப்புயத்தின் அழகுகண்ட மாதர் மடலேறக் கருதுதற்கேதுவாகிய வடிவழகன்; கருங்கல்லைப் பெண்ணாக்குங் காலினான்; "கணிகண்ணன்"என்ற திருமழிசையார் பாடல் கேட்டுப் பாம்புப்படுக்கையைச் சுருட்டிப் பாரமாகமுதுகிலிட்டுப் பின் சென்றவன். தேவர்க்காக அமுதங்கடைந்த செங்கையான். சீதையுடன்கானகத்திற்குச் சென்றவன். சரன் என்ற வேடனுக்குத் தன் கால் நகங்களைக் காட்டிஅவன் அம்பெய்யும்படி செய்து பின் வீடு

கொடுத்தவன். என் காதல் வெள்ளத்துள் மூழ்கியவன். கடல் வெள்ளத்தில் மேல்மிதந்தவன். மக்கள் உள்ளத்தில் உள்ளே வந்தமர்பவன். உலகமெல்லாவற்றையுங்கடந்து நிற்பவன். வெட்ட வெளியில் நின்றும் ஒருவராலும் அறியப்படாதவன்.கிட்டவிருந்தும் ஒருவர் கண்ணிற்கும் புலப்படாதவன். மாயன் என்ற பெயர்ப்பொருளுக்கேற்ப எல்லார்க்கும் மறைந்து நிற்பவன்.
கண்ணன் என்ற பெயர்ப்பொருளுக் கேற்பத் தன்னை யாவர்க்குங் காட்டுவோன். எங்கும் இல்லையெனவும்,எங்கும் நிறைந்திருக்கிறான் எனவும் கூறும்படி ஒளித்தும் வெளிப்பட்டும் உறைபவன்.தன்னையறியாமல் மயங்கும் எனக்குத் தன் வடிவங்காட்டும் தம்பிரான். பழவினையைக்கெடுத்து மும்மலங்களையும் களைந்து என்னைத் தனியாக இருத்தியவன் ; பிரமனும்நான், பிரமன் படைத்த உயிர்களும் நான், அவ்விருவரையும் ஏவுவோனும் நான்என்பதைக் காட்டுவதற்காக, முன் கண்ணனாக மாடு மேய்க்குங் காலத்தில் பிரமன்ஒளித்து வைத்த ஆன்கன்றுகளும் சிறார்களும் தானேயாகிச் சென்றவன். நரகத்தைவிட்டு நீங்குவதற்கு நீங்கள் தவஞ்செய்யவேண்டா ; என் சங்கொலி கேட்டாற்போதும்.ஓர் உடலில் உயிரைக் கூட்டுவதற்குப் பிரமன் வேண்டா ; என் வேய்ங்குழலிசையேபோதும் என்று காட்டுவதுபோலத் தன் சங்கினை வாய்வைத்தூதி, அவ்விசை கேட்டவரனைவரையும் நரகத்தின் விழாது தடுத்தவன் பட்ட மரங்களும் தளிர்த்து,உயிர் பெறும்படி வேய்ங்குழலூதியவன் பரமபொருள் இவனே, ஆதிமூலம் என்றழைத்தபோதே வந்து, `கசேந்திரன் என்ற யானையைக் காத்தான் என்று யாவர்க்கும்தெரியும்படி காக்குஞ் செயல் புரிந்தவன் படைப்பவனும் நானே, துடைப்பவனும் நானேஎன்று செயலாற் காட்டுவது போலத் தன் உந்திக்கமலத்திற், பிரமனைத் தோற்றுவித்துஉலகைப் படைப்பவன்.
உகமுடிவு காலத்தில் தன் வாயா லகமுழுவதையும்விழுங்குபவன். நான்கு வேதங்களின் பொருள்களையும் நாலாயிரங்கவிகளாற் பாடியஆழ்வார் பதினொருவருள்ளத்திலும் அமர்ந்திருப்பவன். செந்தாமரை மலரினின்றுவழியுந் தேன்போலத் திருவடியிலிருந்து கங்கையாறு வடியும்படி உயர்ந்து நின்றவன் ; உலகம்அறிவும் அறியாமையும் உடையது என்பது எவர்க்கும் தோன்றும்படிஅறிதுயிலமர்ந்தோன். தாய் அசோதைக்கு வாயைத் திறந்து காட்டி உள்ளே பூவுலகமுழுவதையும் காண்பித்துத் தன்உள்ளும் புறத்தும் உலகமிருப்பதை யுணர்த்தியவன்,பிறவிக்கடலிற் றோன்றும் அஞ்ஞானமாகிய உவரை நீக்குவதற்கு மேகவடிவங்கொண்டவன். பிற சமயப்போர் என்ற யாறுகள் வந்து கலப்பதற்காகக் கருங்கடலுருவமானவன். தன்னுருவ வொளியில் என்னுருவ வொளியையும்அடக்குவதற்காக நீலமணி நிறங்கொண்டவன்; புவியாகிய ஊசலின் மேலிருப்பவனும்அதனையாட்டுவோனுமாக உயிர்க்குள்ளுயிரா யுறைபவன். வேடர் பார்வை மானைக காட்டிப் பல மான்களைப் பிடிப்பதுபோலத் தன் பிறவி பத்தினால் என் பிறவியெண்பத்து நூறாயிரமும் தொலைப்பவன்;

இடபகிரி என்ற சோலைமலையில்வீற்றிருப்பவன்; சிலம்பாறுடையவன்; தென்பாண்டி நாடுடையான்; சீர்பதியான திருப்பதியான்; பசுந்துளபமாலையான்; அத்துவித மதமாகிய யானையுடையவன்; வேதப்பரியுடையவன்; கருடக்கொடியுடையான்; சிங்கம், யானை, மேகம் ஆகிய மூன்று முரசுடையவன்; அவன் அசையாமல் அணுவசையாது என்று கூறுந் தவநிலையாகியஆணையைத் தரித்தவன்; கண்ணனாகப் பிறந்து வெண்ணெயை எடுத்துண்டவன்;சங்குசக்கரந் தாங்கியவன்; உலக முழுவதையும் உண்ட வாயன்; ஒடுங்கிய வயிற்றன்;படைத்த உந்தியான்; அளந்த திருப்பாதமுடையவன்; இரந்து வாங்கிய கையுடையான்;விளையும் பச்சைப்பயிரின் நிறங்காட்டும் திருமேனியுடையான்; பூமியைத் தோண்டிய கொம்புடையவன்; ஏந்திய முதுகுடையவன்; பாம்புப் படத்தைப் பாயாகக் கொண்டோன்;தன் பெயரை நினைத்துத் திருநாமமிட்டவர்க்கு இகத்தும் பரத்தும் இன்பந்தருவோன்;எட்டெழுத்தைக் கருத்திலிருத்திக் கூறித் துதிப்பவர்க்குப் பிரமன் படைக்கும் பிறவியில்லாமற் செய்வோன். ஈசன் முதலிய தேவர் யாவரும் எங்கள் மலையேஇதுவென்று வந்து தங்கும் நண்புடையோன் ; பச்சைவாரணதாசருக்குக்ண்கொடுத்தவன், யானைக்கன்றுக்கும் கண் கொடுத்தவன் அஞ்சு படையுடையான்;உத்தியோகச்சக்கரமுடையவன்; முன்பு பொன்னிலங்கையை வெற்றியாற் பெற்றுப்பூவுலகை மாவலிபால் இரந்து வாங்கியவன்; திருவரங்கத்தில் உறையும்பெருமாளைப்போல ஆண்டாளுக்கு அன்றி எவர்க்கும் பூமாலை கொடாதவன் ;சங்கத்தழகன் எனப்பேர் பெற்றவன் ; திருப்பாதுகைக்கும் கருடனுக்கும் அரசுதந்தவன்;சவுந்தரவல்லியுடனியைந்த சுந்தரராசன் இவன் என்று சொல்லும் படி விளங்குவோன்;சுந்தரத்தோளன்; மலையலங்காரன் என்ற பெயருடையவன் ; புண்ணியங்கள் வந்துபூசிக்கத் தெய்வமாய் நின்றவன்; மலையத்துவசனுக்கு வேண்டும் வரம் தந்தவன்;அம்பரீடனுக்குத் தன் பாதமலர் தந்தவன்" என்று அழகரைப் புகழ்ந்து கூறினள்
அத்தலைவி.

கோடைத் திருவிழா
   அழகர் கோடைத் திருவிழாக்காலத்தில் எழுந்தருளினர். சோலைமலையிலிருந்து வந்தவெள்ளமெல்லாம் வையையிற் சென்று தேங்கியதுபோல அத்தலத்து மக்கள் யாவரும்வையையாற்றங்கரை வந்தெய்தினர். தல்லாகுளம் வந்து சார்ந்தனர் அழகர். பின்னர்ச்சோமச்சந்திர விமானத்தில் ஏறி வையைக்கு வந்து சேர்ந்தார். மண்ணுலகின்மேல்விண்ணுலகம் வருகின்றதோ? இந்திர விமானமோ? அட்டாங்க விமானமோ? என
ஐயுற்றுப் பின் அவருக்குரிய சோமச்சந்திர விமானமே இதுவென்று கண்டோர் கூறும்படிஇருந்தது அக்காட்சி. அப்போது சூரியனுதித்தான் ; அத்தோற்றம் அவ்விமானந்தாங்குவோர் பலமாகத் தூக்கும்போது பாரம் சேடன் முடியை அழுத்த, அதனால்அவன் முடியிலிருந்து ஒரு நாகமணி தெறித்து மேலெழுந்ததுபோலிருந்தது. குதிரைநம்பிரான்மேல் அழகர் ஏறிச்சென்று கோடி செங்கதிரும் கோடி வெண் மதியும்உதித்தன போலச் செம்பொற்கொடியும் வெண் குடையும் தோன்றவும் மேகமும்இடியும்போல யானையும் அதன் மேல் ஏறிய முரசமும் முழங்கவும், நீர்வீசுந் துருத்திமலைபோல் நீரைச் சொரியவும், கேட்ட வரத்தை யன்பர் கட்குத் தருங் கிணறுபோலக்காணிக்கை வாங்கிக் கோடிக் கணக்கான கைகள் போடுவதற்கிடமாகிய ஆணிப்பொற்கொப்பரை முன் வரவும், மக்கட்கூட்டம் வையையாற்றுட் பரந்துநின்று வெள்ளங்கரைகடந்ததுபோலக் கரையேறி நெருக்கமாக நிற்கவும், அக்கரையின் பாலுள்ளஆயிரக்கணக்கான திருக்கண் மண்டபங்களிற் சென்று சென்று தங்கிப் பின் வண்டியூர்மண்டபம் வந்து சேர்ந்தார். பகல் மறைந்து இரவாயிற்று. ஆதிசேடன் வாகனமாகி
அழகரைத் தாங்கப் பவனிபுறப்பட்டார். முன் அழகர் பகலை இரவாக்கினர். இப்போதுஇரவைப் பகலாக்கினர் என்று கூறும்படியும் தீக்கடவுள் வந்து சேர்ந்ததுபோலவும்,சந்திரன் வந்து சார்ந்து பணிவதுபோலவும், இரவில் கைத்தீவட்டிகளும்,வாணக்காட்சிகளும் இருளைப்போக்கி ஒளியையாக்கி இலங்கின. அவ்வமயம்விளக்கொளியோடு ஒளிமயமாய்ப் பவனிவந்த திருமாலைக் கண்டேன் என்றாள்.
தலைவி தன்னிலைமையைக் கிளிக் குணர்த்துவது
. திருமாலைக் கண்டவுடன் மோகமுற்றேன்.பின்னழகைக் கண்டாற் பெருந்துன்பம் விளையும் என்று கருதி மற்றைப் பெண்களைநோக்கி, "நான் எழுந்தேன் ; திருமுகமும் அவன் மார்பில் உறையும் திருமுகமும்கண்டேன்". அருகில் நின்ற மாதரை நோக்கி, "இவனை அரவணையான் என்றுகூறுவர். அன்றியும், சிவனைப்போல இரவணையான் என்று கூறுவதும் உண்டு, பரவைத்திருவணையான் என்பதுமட்டும் பொய் என்று கூறினேன்." பின் அழகரை நோக்கி,"வெண்ணெய் திருடியதுபோல வளையலையுங் களவு செய்தீரோ? மங்கையராகியஎங்கள் கொங்கை மலைமேல் விழுங்கண்ணருவி சோலை மலை யருவிபோலக்குளிர்ச்சியாயிருக்கிறதோ? எங்கள் சேலையையுந் திருடினீரே! பழைய திருட்டுத்தொழிலைத் தொடுத்துச் செய்யத் துணிந்தீரோ? நாங்கள் கூறு மொழிசெவியிலேறவிலையோ? பாற்கடலிற் றூங்கியதுபோல வையையாற்றிலுந் தூங்குகின்றீரோ?

பெண்ணென்றாற் பேயுமிரங்கும் என்பரே ! நீர்ஏன் இரங்காது செல்கின்றீர்? எம்மை யணைந்து இன்பந்தந்து செல்வீர் என்று காமமயக்கத்தாற் புலம்பினேன். நான் புலம்பி நிற்க என் வேண்டுகோளை ஏற்காதுதேனூர் மண்டபஞ் சென்று தங்கி மீண்டுஞ் சோலைமலையை யடைந்தார். நான்யானையுண்ட விளங்கனியானேன். வெள்ளை நிலவும் அலைகடலும் அயன் மகளிரும்அனங்கனும் விடைமணியும் வேய்ங்குழலும் எனக்குப் பகையாகி என்னுயிரைக் கவரஅமையம்பார்த்து நிற்கின்றன. நான் என்செய்வேன். பசலைநிறம் பாய்ந்து என் கூடுஉன் கூடுபோலாயிற்று. ஆதலால், இருவரும் உடம்பு பச்சையாயிருப்பதால்
ஒத்திருக்கின்றோம். வேறுபாடின்று உனக்குப் பாலூட்டுவேன்; நீராட்டுவேன்;பட்டாடையால் துடைப்பேன். உன்னைக் கூட்டில் அரசியைப் போலிருக்கஅமர்த்துவேன். ஆலத்தியெடுத்துக்காட்டி அகிற்புகையும் காட்டுவேன்; இளவெயிலிற்காயவைத்து முத்தங்கொடுத்து என் கையில் வைத்து அழகர் திருப்பெயரனைத்துங் கற்பிப்பேன். எனக்கு நீ ஓருதவிபுரிவாய்" என்றாள்.
'தூதுக்குத் தகுதியுடையை நீ' எனச் சொல்லுதல்
   வெள்ளை யன்னத்தைத் தூதுவிடுத்தால் அது சொல்லுமோ? அது சூடுபட்டது எனத்தெரிகிறது. குயில் தாய்க்குதவாப் பிள்ளை. அஃது எனக்கு உதவி புரியுமோ?வண்டு மதுவுண்டு மயங்கி அரி என்று கற்பித்தால் அளி என்று சொல்லும். தெற்குஎமன் திசை. அத்திசையிலிருந்து வருந் தென்றல் என் காதலை அழகர்க்குக் கூறுமோ?மேகத்தைத் தூது விடலாமோ? அது மாதரையெல்லாந் தூற்றுந்தன்மை யுடையது.காக்கைக்குக் கொடி என்பது பெயர். கொடியார் எனக் காக்கையாரைக் கூறலாம்.பரங்கருணையார் ஆகிய அழகர் முன் காக்கையார் போய்த் தூது கூறுவாரோ?கொடியார் என்ற பெயர் பெற்றவர் ஆதலால் போகார். நீதான் போய்த் தூதுகூறுந்தகுதியுடையை. அழகர் பல அடியார்களுடன் இருந்தால் அவ்வடியார்கள் பாடுவதுபோல நீயுங் கீர்த்தனம் பாடுவாய். நாச்சியார் பக்கத்திருந்தால் அவர் கையிற்பறந்து சென்றுதங்குவாய். 'எங்கிருந்து வந்தா' யென்று வினவினால் 'எந்தாய்!திருமாலிருஞ்சோலையிலிருந்து உனைத் தேடித் தொழுவதற்கு வந்தேன்'என்றுரைப்பாய். சவுந்தரவல்லிக்கும் சூடிக் கொடுத்தாளுக்கும் தோன்றாதபடியும்கடுகளவு சினமும் தோன்றாதபடியும் என் காதலை வடுகிலே (தெலுங்கிலே) சொல்வாய்.என் கவலையையும் நீக்குவாய். அழகர் புனைந்திருக்கும் மண மாலையைவாங்கிக்கொண்டு வருவாய் ; இத்துணைத் தகுதியுடைய பறவை ஒன்று எங்கேனும்உளதோ? இல்லை. நீயே செல்" என்று கூறிப் பின் இடம் அமையம்எடுத்துரைக்கின்றாள்.
இடம் அமையம் எடுத்துரைத்தல்
  அழகர் இருக்கும் இடம் சோலைமலை. அத்தலத்தில், முதல் யுகத்தில் ஆலாகி,இரண்டில் அரசாகி, மூன்றிலே வில்வமாகி, நான்காகிய இக்கலியுகத்திற் புத்திரதீபமென்ற பெயர்பெற்ற மரமாகித் தேவர்கட்கு ஆறாவது தருவாகி நிற்கும் ஒரு மரமுண்டு.அன்றியும், நெருங்கிய கோடிக் கணக்கான பூஞ்சோலைகளும் யாறுகளும்
பூஞ்சுனைகளும் உள்ளன. யோகிகளைப்போல இரவும் பகலும் உறங்காப் புளியமரமும்ஒன்றுண்டு. மகன் தன் தந்தையுடன் பேச வருவதுபோலப் பிரமன் வருவான். வந்துதந்தையாகிய அழகரைக் கண்டு பேசித் தங்கியிருப்பன். இந்திரன் தன் துணைவனாகியஉபேந்திரனி்ல்லையே என்று கருதி வந்து வணங்கியிருப்பன். பரதன், சுக்கிரீவன்,விபீடணன் என்ற தம்பியர்க்கு அரசு கொடுத்த இராமன் ஆகிய அழகர் அவர்களுடன்அங்கிருப்பர். சீரங்கராசபட்டர் என்ற அர்ச்சகரும், திருமாலிருஞ்சோலைச் சீயரும்,திருமாலையாண்டானும், தோழப்பையங்கார் என்னும் ஆச்சாரியரும், ஒவ்வொரு நாளும்பணியும் பட்டராகிய வேதபாரகரும், அமுதார் என்பவரும், திருமலை நம்பிகளும்,சோலைமலை நம்பி களும், சடகோப நம்பி என்பவரும், திருமாலிருஞ் சோலைப் பிரியர் என்பவரும்,அம்மலையிலிருந்து ஆளுந் திருமாலாகிய அத்தெய்வத்தினருளையே துணையாகக்கொண்டு எந்நாளும் வாழும் கோயிற் பணியாளர் பலரும் கூடிப் பாதத்தைவணங்கும்படி திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பர் அழகர்.     அப்போது நீ சென்று என் காதலைக் கூறுவையாயின் அம்மொழி செவியிலேறாது.பள்ளியறைக்கு எழுந்தருளும் அமையம் பார்த்து எழுந்து ஒருவரும் ஒன்றுஞ்சொல்லாத அமையமும் பார்த்து நீ சொல்லுக. மன்மதன் மலரம்பு தூற்ற வருவதற்குமுன்னும் அயலார் என்னை யலர்கூறி்த் தூற்றுவதற்கு முன்னும் குடமுனிவாயினடங்கிவெளிவந்த கடலின் ஒலியடங்கவும், தாய்மார் வாயின் அதட்டுஞ்சொற்கள் அடங்கவும்நீ தூது கூறுவாய். சுவாகதம் என்பது உன் பெயர். அதன் பொருள் நல்வரவு என்பது.ஆதலால் உன்வரவை நல்வரவாகக் கொள்வார் எல்லாரும், இராமனே உன்னைப்புகழ்ந்தான் என்றால் யார்தாம் உன்னைப் புகழாதிருப்பவர்? எல்லாரும் புகழ்ந்துபேசுவர். நீ முதலில் திருமாலை நோக்கி, 'உம்முடைய இருபுயத்து மாலையை யுதவும்'எனக் கேள். அதனை உதவாது மறுத்தனரெனில், நாச்சியார் சூடிக்கொடுத்தமாலையையாவது கேள்; அழகர் கருணையுடையவர்; ஆடித்தியாகம் அளிப்பவர் ;எவர்க்கும் இல்லை என்று சொல்லார். அதனால் அவர் புயத்து மணமாலையை வாங்கி வருவாயாக" என்று கூறிமுடிக்கின்றாள் ; தலைவி,

   ,
அழகர் கிள்ளை -இலக்கிய நயம்
இந்நூற் செய்யுணடை, எதுகை மோனை யமைந்து இனிமையும் எளிமையும்வாய்ந்து, ஒழுகிய ஓசையும் விழுமிய பொருளும் கெழுமியதாய்ப் படிக்கப்படிக்க இன்பந்தரும் பான்மையினமைந்து செல்கின்றது. தன்மை முதலிய பொருளணிகளும், மடக்குமுதலிய சொல்லணிகளும் பல விடங்களில் வந்துள்ளன. இராமாயணம், பாகவதம்,கந்தபுராணம், திருவிளையாடற் புராணம் ஆகிய புராணங்களிற் கூறப்படுங் கதைகள்
பல வரக் காண்கின்றோம். பழமொழி நாட்டுவழக்கம், மரபு, உலகியல்பு, இடையிடையே
வருகின்றன. எனவே இந்நூலாசிரியர், இலக்கணம் இலக்கிய
முதலிய பல நூல்கள் கற்றுணர்ந்தவர் என்பதும், உலகியல் வழக்கு, செய்யுள் வழக்கு பயின்று கவிபாடும் ஆற்றலுடையவர் என்பதும் கூறாமலே நன்கு விளங்கும். வெளிப் பொருள் ஒன்று, உட்பொருள் ஒன்று அமையப் பாடுவதே இவர் இயற்கைபோலும், நூலுட் காண்க.
பொருத்தம்
   ஆசிரியர் நூலின் தொடக்கத்திற் "கார்கொண்ட" என்ற சீர் எடுத்திருப்பது பாட்டுடைத்தலைவர் ஆகிய "அழகர்" என்ற பெயருக்குப் பொருத்தம் பார்த்து வைத்ததாகத் தோன்றுகிறது. மங்கலம், சொல், எழுத்து, தானம், பால், உண்டி, வருணம், நாள், கதி, கணம் என்ற பத்தும் பொருந்தியுள்ளது அச்சீரின்கண். பாட்டியல் கற்றவர் என்பதில் ஐயமுளதோ? ஆய்ந்தறிக.
பொருளணி
"துரி சற்றோர்,
இன்சொல்லைக் கற்பா ரெவர்சொல்லும் நீ கற்பாய்
உன்சொல்லைக் கற்கவல்லா ருண்டோகாண்"
(16, 17)

"வாளனைய கண்ணார் வளர்க்கவளர் வாயுறவில்
லாளனைநீ கண்டா லகன்றிடுவாய்"
என்று கிளியின் இயற்கைப் பண்பிணை எடுத்துரைக்குமிடங்கள் தன்மையணி யமைந்துள்ளன. அழகர் தெய்வப் பண்பினைச் செப்புமிடங்களிலும் அவ்வணி சேர்ந்துள்ளன.
"இந்திரன் போலு மிடபாசலம் அவன்மேல்
வந்தவிழி போலும் வளச்சுனைகள் - முந்துதிரு
மாலுடைய தோளின் மணிமார்பின் முத்தாரம்
போலவரு நூபுரநதி யான்"
(102, 103)
எனவும்,"இயலுங் கரியுமதி லெற்று முரசும்
 
புயலு முருமேறும் போல"



எனவும் உவமையணி அமைந்துள்ளன.
"உண்ணின் றுருக்கும் .......
அத்துவிதா னந்தமென்ற களி யானையினான்"
(112 - 116)

"தானந் தவர்க்கத் துடனெழுந்து......வேதப்புரவியான்"
 
(116 - 119)
எனவும் அத்துவிதானந்தத்தை யானையாகவும், வேதத்தைப் புரவியாகவும் உருவகஞ் செய்திருப்பது காண்க.                    "வன்போரில்,
மேவுஞ் சிவன்விழியால் வேள்கருகி நாண்கருகி
கூவும் பெரிய குயில்கருகிப் - பாவம்போல்
நின்று மறுப்படுநாள் நீதா னடுப்படையிற்
சென்று மறுப்படா தேவந்தாய்"

 - 41)

எனவும்,
"பார்க்கும் பொழுதிலுனைப் பார்ப்பதியென் பாரென்றோ
மூக்குச் சிவந்தாய் மொழிந்திடாய்"
(3)

"கைச்சிலைவே ளால்வருந்துங் காமநோய் தீர்ப்பதற்கோ
பச்சிலை ரூபம் படைத்திருந்தாய்" ;
(49)
எனவும் கற்பனை வந்துள்ள இடங்கள் காண்க. இன்னும் பல இடங்களில் இவ்வணிகள் வந்துள்ள பகுதிகளும் பிற வணிகள் வந்துள்ள பகுதிகளும் ஆய்ந்து காண்க.
சொல்லணி
"குருகூரத் தானேசங் கூர்கமுகி லேறும்
குருகூரத் தானேசங் கூர்" (காப்பு)

"பாத கமலம் பரவுமலை யத்துவசன்
பாத கமலம் பறித்திடுவோன்"
(141)

"திருப்பாது கைக்கும் செழுங்கருடனுக்கும்
திருப்பாது கைக்குமர சீந்தோன்....."
(137)
எனவும் வரும்.
----------------------------------------------------------------------------


No comments:

Post a Comment