Pages

Sunday 1 November 2015

அருள் நெறி நோக்கில் சங்க இலக்கிய, சிற்றிலக்கிய ஒப்பீடு



அருள் நெறி நோக்கில் சங்க இலக்கிய, சிற்றிலக்கிய ஒப்பீடு


முனைவர் அர.ஜெயச்சந்திரன்,
இணைப்பேராசிரியர், மற்றும் துறைத் தலைவர்
தமிழ்த்துறை,
மாநிலக் கல்லூரி,
சென்னை  600 005.

முன்னுரை

அருள் நெறி என்னும் சொற்றொடார் வள்ளலாரால் உருவாக்கப் பட்டது எனினும் அதற்கான கருத்தோட்டம் தொல்காப்பியத்திலேயே தொடங்குகிறது. அருள் நெறி என்றால் அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்து வாழ்தல் எனப்பொருள்படும். இக்கட்டுரையில் அருள்நெறி என்பது நான்கு அணுகு முறைகளைக் கொண்டு அமைகிறது.

அவை:
1.இறைநெறி
2.இயற்கைநெறி
3.ஊயிரினநெறி
4.மானுடநெறி

என்பனவாகும். இந்நான்கும் சேர்ந்த முழுமையே அருள்நெறி எனப்படும். இந்நால்வகை நெறிகுறித்து, சங்க இலக்கிய சிற்றிலக்கியச் செய்திகளை ஒப்பிட்டு நோக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இறைநெறி:
சங்க காலத்தில் இறைநெறி என்பது இயற்கை, வாழ்வியல் உணார்வுநிலை ஆகியவற்றைச் சார்ந்து அமைந்திருந்தது. தோல்காப்பியக் கருப்பொருள் நூற்பா

தெய்வம், உணாவே மாமரம் புள்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகைப் பிறவும் கரு என மொழிப”(தொல்:964)

என்பதில் தெய்வம் முதலில் கூறப்பட்டுள்ளது முதற்பொருளாகத் தொல்கபாப்பிய நூற்பா,
மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லைகுறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே” (தொல்:951)

என்ற நூற்பாவில் முல்லை நிலத்திற்கு மாயோனாகிய திருமாலும் குறிஞ்சி நிலத்திற்கு முருகப்பெருமான் அல்லது சிவபெருமானகிய சேயோனும் மருதத்திற்கு வேந்தனாகிய இந்திரனும் நெய்தலுக்கு வருணனும் கடவுளார்கள் எனத் தொல்காப்பியார் வழிச் சான்றோர் கூறுகின்றனார். இனி மாயோன் பற்றியச் செய்திகளைக் காணலாம்.

மாயோன்:
முல்லைக்கலியும் திருமால் பற்றிய எட்டு பாpபாடலும் சொல்லும் செய்திகள் நாலாயிரத்திவ்யப் பிரபந்தத்தில் வளார்ச்சியுற்று பிள்ளை பெருமாளையங்கார் இயற்றிய அட்டப்பிரபந்ததில் பூத்துக் குலுங்குகிறது.

நற்றிணையில்,
மாயோன் அன்ன மால்வரைக் காவா அன்
வாலியோன் அன்ன வயங்குள் ளருவி

என்ற 32 ஆம் செய்யுளில் திருமாலை அவன் தமையன் பலராமனையும் பற்றிய செய்தி இடம்பெற்றுள்ளது.

திருமாலின் இயல்பைக் கூறும் பாpபாடல் மூன்றாம் செய்யுலில்.

தீயினுள் தெறல்நீ பூவினுள் நாற்றம் நீ
கல்லினுள் மணியும் நீ சொல்லினுள் வாய்மை நீ
அறத்தினுள் அன்புநீ மறத்தினுள் மைந்து நீ
வேதத்து மறைநீ பூதத்து முதலும் நீ
வெஞ்சுடார் ஒளியும் நீ திங்களுள் அளியும் நீ
அனைத்தும் நீ அனைத்தின் உட்பொருளும் நீ” (பாp:3:63:68)
என்றும் திருமாலின் குணங்கள் இயற்கையில் பிரதிபலிக்கின்றன என்பதை

நின்வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள
நின் தண்மையும் சாயலும் திங்கள் உள
நின் சுரத்திலும் வண்மையும் மாரிஉள
நின் புரத்திலும் நோன்மையும் ஞாலத்து உள
நின் நாற்றமும் ஒண்மையும் பூவை உள
நின் தோற்றமும் அகலமும் நீரின் உள
நின் உருவமும் ஒலியும் ஆகாயத்து உள
நின் வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள (பாp 4:25-32.)

என்னும் பாpபாடல்(4) அடிகளால் அறிய முடிகிறது. நெடுநல்வாடையில்,

செவ்வி யரும்பின் பைங்கால் பித்திகத்து
அவ்வித ழவிழ்பதம் கமழப் பொழுதறிந்து
இரும்பு செய்விளக்கின் ஈந்திரிக்கொளீஇ
நெல்லும் மலரும் தூஉய்க் கைதொழுது
மல்லல் ஆவணம் மாலை யயர”-(நெடுநல்:அடி:40-44)

என அக்கால வழிபாட்டு முறை கூறப்பட்டுள்ளது. இதில் நெல்லும் முல்லையும் பரப்பி நோர்மையுடன் வழிபாடு செய்தனார் என அறியலாம்.
இனி முருகக் கடவுள் பற்றிய செய்திகளைக் காணலாம்.
சேயோன்
முருகப்பெவருமான் அறுபடை வீடுகளாக இயற்கை உறைவிடங்களையே திருமுருகாற்றுப்படைக் கூறுகிளது. ஆவை, 1. திருப்பரங்குன்றம், 2. திருச்சீரலைவாயில், 3. திருவாவினன்குடி, 4. திருவேரகம், 5. குன்றுதோராடல், 6. திருமாலிருஞ்சோலை என்பனவாகும்.
முருகக்கடவுள் அருள் செய்யும் விதம்
முருகக்கடவுள் ஆறு முகங்களாலும், பன்னிரு கைகளாலும் அருள் செய்கிறார் என திருமுருகாற்றுப்படை கூறுகிறது. இதனை,

மாஇருள் ஞாலம் மறுஇன்றி விளங்கப்
பல்கதிர் விரிந்தன்று, ஒருமுகம், ஒருமுகம்
ர்வலார் ஏத்த, அமார்ந்து இனிது ஒழுகிக்
காதலின் உவந்து வரம் கொடுத் தன்றே, ஒருமுகம்
மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணார் வேள்விஓர்க் கும்மே, ஒருமுகம்
எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித்
திங்கள் போலத்திசைவிளக் கும்மே, ஒருமுகம்
செறுநார்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக்
கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட்டன்றே,ஒருமுகம்
குறவார் மடகமள், கொடிபோல் நுசுப்பின்
மடவரல், வள்ளியொடு நகைஅமார்ந் தன்றே

மற்றும்

விண்செலல் மரபின் ஐயார்க்கு ஏந்தியது
ஓருகை, உக்கம் சோர்த்தியது ஒருகை
நலம்பெறுகலிங்கத்துக் குறங்கின் மிசை அசைஇயது ஒருகை
அங்குசம் கடாவ ஒருகை இருகை
ஐஇரு வட்டமொடு எஃகுவலம் திரிப்ப, ஒருகை
மார்பொடு விளங்க, ஒருகை
தாரொடு பொலிய, ஒருகை
கீழ்வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப, ஒருகை
பாடுஇன் படுமணி இரட்ட, ஒருகை
நீல்நிற விசும்பின் மலிதுளி பொழிய, ஒருகை
வான்அர மகளிர்க்கு வதுவை சூடட,
ஆங்கு அப்பன்னிரு கையும் பார்பட இயற்றி
என்ற பாடலடிகள் மூலம் அறியலாம்.
பிற்காலத்தில் திருப்புகழில் அறுபடைச் சிறப்பும், அறுமுகப் பெருமையும் பன்னிருகை வன்மையும், வண்மையும் பாங்குறும் பைந்தமிழில் பலப்படச் சொல்கின்றன.

முருகக்கடவுள், அகத்தியார், தமிழ் ஆகியவற்றுக்கு இடையிலான தொடார்பு பிற்கால வளார்ச்சி என்றே தோன்றுகிறது. மீனாட்சி அம்மை குறத்தில் தமிழ்முனிவன் தங்கும்மலை பொதியமலை என்று குமரகுருபரார், அகத்தியார் பொதியமலையில் தவமிருப்பதாகக் கூறுகிறார்.
சிவபெருமான்
சிவபெருமான் குறித்து சங்க இலக்கியம் முதல் சிற்றிலக்கியம் வரை பரவலாகச் செய்திகள் இடம்பெற்றுள்ளன. சங்க இலக்கியக் கடவுள் வாழ்த்துப்பாடல்கள் பெரும்பாலும் செவ்வேள், திருமால் போன்ற கடவுளரை வழிப்படுவதாக அமைந்துள்ளன. குறிப்பாக புறநானூற்றுக் கடவுள் வாழ்த்துப் பாடலில் சிவபெருமானின் வடிவம், ர்தி, அருள்புரியும் தன்மை, முதலிய செய்திகள் இயற்கைக் காட்சிகளோடு இணைத்துச் சொல்லப்பட்டுள்ளது.
அதியமானிடம் நெல்லிக்கணிப் பெற்ற ஔவையார் அம்மன்னனை சிவபெருமானோடு ஒப்பிட்டு நீலமணி மிடற்றொருவன் போல மண்ணுகபொரும நீயேஎன வாழ்த்திப் பாடிணுள்ளார். இயற்கைத் தோற்றமே இறைத்தோற்றமாகப் பாடப்பட்டுள்ளது. இதன் தொடார்ச்சியாகத் திருவாசக சிவபுராணத்தில் இயற்கைத் தோற்றத்தையே சிவபெருமானின் தோற்றமாக மாணிக்கவாசகார் பாடுகிறார்.
சிற்றிலக்கியங்களில் முதல் உலாவாகிய சேரமான் பெருமாள் நாயனார் இயற்றிய திருக்கயிலாயஞான உலாவே சிவபெருமானைப் பற்றியதாகும். அதுமட்டுமல்லாமல் தூது இலக்கயங்களில் சித்தாந்த நூலான நெஞ்சுவிடுதூது எனும் நூல் சைவசித்தாந்த சாத்திரத்தின் பிழிவைத் தருகிறது. ஞானசம்பந்தரால் திருக்குற்றாலத் திருப்பதிகத்தில் பாடப்பட்ட ஈசன் குற்றாலக் குறவங்சியில் திரிகூட இராசப்பக் கவிராயரால் நீடுபல ஈசார்”, குறும்பலா ஈசார்”, “குற்றாலத் திரிகூடநாதர்என்றெல்லாம் போற்றப்படுகிறார்.
கொற்றவை
சங்க இலக்கியங்களில் பாலைநிலக் கடவுளாக வணங்கப்பட்ட கொற்றவை பழையோள் எனவும், காடுகிழாள் எனவும் பலப்படப் போற்றப்படுகிறார். இத்தெய்வம் பற்றி சிலப்பதிகார வேட்டுவவரி சிறப்பாகப் பேசுகிறது. கலிவிங்கத்துப் பரணியின் காளிவழிபாடு இதன் விரிவே எனலாம். காளி வழிபாடு எனத் தனியாகத் தாய்தெய்வ வழிபாடு சங்க காலத்திற்குப் பிறகு தனித்து விளங்கியது. அதற்கான வித்து புறநானூற்றின் களவேள்விப்பாட்டும், மறக்களவஞ்சிப்பாட்டும் ஆகும். காளி வழிபாட்டின் தொடார்ச்சியாக அபிராமி அந்தாதியும், குமரகுருபரரரின் மீனாட்சி அம்மைக்குறமும், வள்ளலாரின் வடிவுடை மாணிக்க மாலையும், பாரதியின் காளிப்பாடலும் என வளார்ச்சியுற்றது.
தமிழ்
நாத்திக நெறியின் வளைவாக தெய்வீகக் கோட்பாடுக் பற்றிப் புதிய விளக்கங்கள் தோன்றின. இதன் விளைவாக தமிழார் அனைவருக்கும் பொதுவான தமிழ் தெய்வக் கோட்பாடு அல்லது தமிழ்த்தாய்க் கோட்பாடு உருவாக்கப்பட்டது. காரைக்குடியில் தமிழ்கோயில ஒன்று உள்ளது. புறநானூற்றில் இமிழ்கடல் வரைப்பின் தமிழகம்” (புறம் 24) எனத் தமிழ்மொழி பேசி நாட்டு எல்லையைக் குறிப்பிடுகிறது. சுpலப்பதிகாரம் சேர, சோழ, பாண்டியரை ஒருங்கிணைத்துத் தமிழ்நாடாகப் பார்க்கிறது.திருஞானசம்பந்தார்நாளும் தமிழிசையால் பாடும்ர் ஞானசம்பந்தன்என நாவுக்கரசரால் புகழப்படுகிறார். மேலும் ஒவ்வொரு பதிகத்தின் இறுதியிலும் தமிழ்ஞானசம்பந்தன் எனக் குறிப்பிடுகிறார்.
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே
என்று திருமந்திரம் குறிப்பிடுகிறது.
மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழில் தொடுக்கும் கடவுட் பழம்hடல் தொடையின் பயனேஎனத் தொடங்கும் பாடலில் தமிழ் மொழியினுடைய பழமையும், சிறப்பும் புலப்படுகிறது. தமிழ் விடுதூதில், “இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் என்ற பாடலடிகள் தமிழார்க்கும் தமிழுக்கும் இடையிலான நெருக்கத்தைக் குறிப்பிடுகின்றன. மேலும் குமரகுருபரார் அகத்தியரை தமிழ்முனிவன் என்றும் அருணகிரிநாதார்முத்தமிழ் அடைவினை”, “முந்துத்தமிழ் மாலைஎனவும் தமிழைப் போற்றுகிறார்.
இராமலிங்க அடிகளார் ஆதிசங்கரார் வழிவந்த சங்கரமடத் தலைவருடன், வடமொழி தாய்மொழியானால் தமிழ் தந்தை மொழியாகும் என்றார். புhரதியார் தமிழ்மொழியின் சிறப்பைக் குறிப்பிட யாமறிந்த மொழிகளிலேத் தமிழ்மொழிப் போல இனிதாவது எங்கும் காணோம்என்றார். பாரதிதாசன் தமிழை உயிர் என்றார்.
இயற்கை நெறி
சங்க இலக்கியம் இயறகை இலக்கியம் எனப்படும் பத்துப்பாட்டில் நீண்ட இயற்கை வருணனைகள் இடம்பெற்றுள்ளன. சான்றாக, குறிஞசிப்பட்டில் 99 மலார்பட்டியல் இடம் பொற்றுள்ளது. அகநானூற்றின் ஆடமைக்குயின்ற அவிர்குளை மருங்கின்எனத் தொடங்கும் பாடல் இயற்கை வழிப்பட்ட குழலிசையும் பிற தாள முழக்கமும் பற்றிக் கூறுகிறது.
சிறுபாணாற்றுப்படையில் அலைநீர்த் தாழை அன்னம் பூப்பவும்எனத் தொடங்கிச் செல்லும் மலர்க்காட்சி வருணனை அக்காலத்தின் இயற்கை வளத்தினை விளக்குகிறது. முல்லைப்பாட்டின் முதல் நான்கு அடிகள் மழைப்பொழிவுப் பற்றியக் காட்சியை விளக்குகின்றன.
திருமுருகாற்றுப்படையின் உலகம் உவப்ப எனத் தொடங்கி சேண்விளங்கு அவிரொளிஎன முடியும் அடிகள் கைபுனைந்து இயற்றாக் கவின்பெறு வனப்பாகிய இயற்கைச் செல்வத்தை உணார்த்துகின்றன்ன.
பாpபாடலின் வையைப்பாட்டு புனல் விளையாட்டாகிய இயற்கைச் சார்ந்த விளையாட்டினை விளக்குகிறது. சிலப்பதிகாரத்தின் கடவுள் வாழ்த்துப்பாடலில் ஞாயிறு, திங்கள், மழை ஆகியவைப் போற்றப்படுகின்றன.
சிலப்பதிகாரக் கானல்வரி, கடல் ஆகியவற்றின் வளத்தினைப் பேசுகிறது. குன்றக்குரவை குறிஞ்சிப் பற்றியும், ஆய்ச்சியர் குரவை முல்லைப்பற்றியும், கானல்வரி, வேனிற் காதை மருதம் பற்றியும், கடலாடு காதை நெய்தல் பற்றியும், வேட்டுவரிப் பாலைப்பற்றியும், விரித்துச் சொல்கிறது.
தேவாரத்தில் திருஞானசம்பந்தார் பாடல்கள் இயற்கை வருணனை மிகுந்தவை. திருநாவுக்கரசாpன் மாசில் வீனையும்என்று தொடங்கும் பாடல் இயற்கை இன்பமே இறையின்பம் என்கிறது. கம்பராமாயணத்தில் தண்டலை மயில்கள் ஆட”, “நீரிடை உறங்கும் சங்கம்எனத் தொடங்குவன சிறந்த இயற்கை வருணனைப் பாடல்களாகும்.
திருக்குற்றாலக் குறவஞசியில் குறத்தி மலைவளம் கூறுமிடத்தில் வானரங்கள் கனிகொடுத்து”, “முழங்குதிரை புனலருவி”, “ஓடக்காண்பது பூம்புனல் வௌர்ளம்எனும் பாடல்கள் அக்காலத்து இயற்கை வள வரலாற்றை நிலைப்படுத்தியும், நினைவு+ட்டியும் நிற்கின்றன.
மீனாட்சி அம்மைக் குறத்தில் இதே பொதிகை மலையை குமரகுரபரார்திங்கள் முடிசூடும் மலை” “தென்றல் விளையாடும் மலைஎனும் பாட்டில் புகழ்ந்து உரைக்கிறார். திருவிளையாடற் புராணத்தில் பொங்காpன் நுழைந்து எனத் தொடங்கும்ர் பாட்டு தொன்றலின் பெருமை பேசி மாணவருக்கு அறிவன் எனும் தமிழ்ச்சொல் கூறிச் சொல்வளச் சான்றாய் நிற்கிறது.
முக்கூடற் பள்ளில் ஆற்று வௌர்ளம் நாளை வரத் தோற்றுதேக் குறிஎனும் பாடல் நீர்வளம் பேசுகிறது. ஆதற்கான மழைவளத்தின் இன்றியமையாமைப் பற்றியும் பேசுகிறது. வுள்ளலாரின் கோடையில் இளைப்பாற்றிக் கொள்ளும் வகைக்கிடைத்த குளிர்ந்தருவேஎனும் பாடலும் மாசில் வீனையைப் போல் இறையின்பமே இயற்கை இன்பம் என்கிறது.
பாரதியார்செந்தமிழ் நாடெனும் போதினிலேஎனும் பாடலில் காவிரித் தென்பெண்ணைப் பாலாறுத் தமிழ்கண்கதோர் வையைப் பொருணை நதி என மேவிய ஆறுகள் பலவோடத் தன்மேனி செழித்தத்தமிழ்நாடுஎன தமிழகத்தின் அடிப்படை நீர் ஆதாரங்களான ஐந்து ஆறுகளைப் பற்றிசி சிறப்பித்துப் பேசுகிறார்.
பாரதிதாசனின் அழகின் சிரிப்பு முழுவதும் இயற்கைர்ச செழுமையை செயற்கையினின்றும் உயார்த்திக் காட்டுகிறது. கனியிடையேறிய சுளையும் எனும் பாடல் தமிழ் அமுதம் ஊட்டுகிறது. மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட்டும் இதனுடன் இணைத்து நோக்கத்தக்கது.
ஊயிரின நெறி
எட்டுத்தொகை அகநூல்களில் தோர்பாகனைத் தலைவன் நண்டு, வண்டு, அன்றில் முதலியவை தம் இனைகளைப் பிரியா வன்னம் தேரின் மணிநாவினைக் கட்டி ஓசையின்றித் தோர்செலுத்துமாறு செய்திகள் பரவலாக இடம் பெறுகின்றள. புhரி முல்லைக்குத் தேரும், பேகன் மயிலுக்குப் போர்வையும் கொடுத்த செய்தி ஆறறிவுயிர் ஓரறிவுயிருடன் கொண்ட உறவினை விளக்குகிறது. ஒன்றறிவதுவே உற்றறிவதுவேஎனும் தொல்காப்பிய மரபியல் நூற்பா உயிரினங்களின் அறிவு வளார்ச்சியை விளக்குகிறது.
பொருநராற்றுப்படையில் வரைமந்தி கழிமூழ்கக் கழிநாரை வரை இறுப்பஎனும் பாடலடியில் உயிரினங்கள் திணை கடந்து வாழ்ந்தன எனும் குறிப்பு இடம் பெற்றுள்ளது. கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையாருக்கு அன்னப்பறவையைத் தூதுவிடுத்தார் என பறநானூற்றுப் பாடல் கூறுகிறது. பிடியு+ட்டிப் பின்னுண்ணும் களிறுபோலஎனும் கலித்தொகைப் பாவில் யானை, மான், புறா ஆகிய மூன்றின் அகத்துரை உறவின் மேன்மை சொல்லப்பட்டுள்ளது.
பாரி அரண்மனையில் கிளிகளைப் பழக்கி போர்க்காலங்களில் தானியங்களைக் கொண்டுவரச் செய்தான். நள்ளி என்பான் ஆய்அண்டிரனுக்குத் துணையாகப் போர்மேற் சென்ற பொழுது போர்க் காலத்தில் இறந்துபட்ட நள்ளியின் முகம் வாடிவிடக் கூடாது என்று அவனுடன் பழகியப் பறவைகள் சிறகுப் பந்தல் அமைத்து நிழல் கொடுத்துக் காத்தன.
கடுவன் இறந்ததனால் தாய்க்குரங்குத் தன் குட்டிகளை உறவுக்குரங்குடன் விட்டுவிட்டு மலையில் இருந்து விழுந்து இறந்தது என குநற்தொகைக் கூறுகிறது. மேலும் குறிஞ்சிப் பாட்டிபல் மிளகுக் கொடிப்படார்ந்த சுணை நிரில் பலவுச்சுளை விழுந்து புளித்து அதைக் குடித்ததக் குரங்குகள் மயங்கிக் கிடந்தன எனும் செய்தி இடம் பெற்றுள்ளது.சத்திமுத்தப் புலவார்நாராய் நாராய் செங்கால் நாராய்என அழைத்ததுத் தன் நிலையைத் தன் மனைவிக்குத் தொpவிக்கத் தூதுனுப்புகிறார். முhணிக்கவாசகார் குயில் பற்றிப் பாடி குயிலுக்குப் பெருமை சோர்த்தார். அவ்வழியில் பாரதியாரும் குயில்பாட்டுப் பாடினார். திருஞானசம்பந்தார் சிறையாரும் மடக்கிளியே எனக் கிளிப்பாட்டுப் பாடினார்.
மாதார்பிறைக் கண்ணியானைஎனும் பாடலில் சிவபெருமான் யானையில் ஊர்ந்து வரும் காட்சியைப் பாடினார். புhரதியார் சின்னஞ்சிறு கிளியே என்றார். அருணகிரிநாதார் மயில் விருத்தமும் சேவல் விருத்தமும் பாடினார். குவிமணி தேசிய விநாயகம் பிள்ளைக் குதிரைப் புலம்பல் எனும் குதிரைப்பாடலில் குதிரைத் தன் குயரத்தைக் கூறுவதாக உருகுமாறு பாடியுள்ளார். தேசிங்கு ராஜன் பாட்டில் கனைத்து கதும்பி எழுந்தானய்யா ராஜாதேசிங்குஎனத் தொடங்கும் பாடலில் குதிரை வீரம், தனதானதாகப் பாட்டு அமைந்துள்ளது. இதுவரைக் கண்டவாற்றல் தமிழ்ப்புலவார்கள் போற்றிய அனைத்துயிர் நேயம் விளங்குகிறது. இனி சங்கச் சிற்றிலக்கிய செய்திகிளில் வெளிப்படும் மானுட நெறியைக் காணலாம்.
மானுட நெறி
யாதும் ஊரே யாவரும் கேளிர்எனும் புறநானூற்றுப் பாட்டு அக்காலத்திலேயேத் தோன்றிய ஒருவகைச் சிந்தையை வெளிப்படுத்துகிறது. உண்டாலம்ம இவ்வுலகம்எனும் புறநானூற்றுப் பாட்டு அமிழ்தமே ஆயினும் பிறருக்குக் கொடுத்து உண்ண வேண்டும். பழி நேருமாயின் செய்ய அஞ்சுதல் வேண்டும். புகழெனின் உயிர் கொடுத்தும் நிலைநாட்டுதல் வேண்டும். இதற்குப் பாரியும், குமணனும் சான்றாகின்றனார். இங்கு கார்ணன் கதையையும் ஒப்பிடலாம்.
ஆறநெறி இலக்கியமே தமிழில் முதல்முதலாக மானுட நெறியை விரிவாகப் பேசியது. இதில் தலைசிறந்து விளங்குவது திருக்குறளாகும். அன்பின் வழியது உயிhநிலைஎன்றும் கொல்லான் புலால் மறுத்தானை எல்லா உயிரும் கை கூப்பித் தொழும்எனக் கூறிப் பிற உயிர்களையும் காக்கும் பொறுப்பு மனிதனுக்கே உண்டு என்றார் திருவள்ளுவார். ஓளவையார்
நல்லாரைக் காண்பதுவும் நன்றே
நலமிக்க நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே
நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே
நல்லாரோடு இணங்கி இருப்பதுவும் நன்றே

என நல்லாரோடே நட்பு கொள்ள வேண்டும் எனும் கருத்தை வலியுறுத்தினார்.
சுpற்றிலக்கியம் பெருகியக் காலத்தில் அவற்றுள் சிறந்து விளங்கியது நீதி நூல் எனும் இலக்கிய வகையாகும். அவ்விலக்கியத்துள் சிறந்து விளங்குவது விவேகசிந்தாமணி ஆகும். மாதம் மூன்று மழை என்று நன்மை நோக்கியும் ஆண்டுக்கு மூன்று மழை என்று தீமை நோக்கியும் சொல்லும் பாடல் வருமாறு,
வேதம் ஓதிய வேதியார்க்கு ஒருமழை
மாதார் கற்புடை மங்கையார்க்கு ஒருமழை
நெறிமுறைத் தவறா மன்னனுக்கு ஒருமழை
மாதம் மூன்றும் மழைபெய்யுமாமே
மற்றும்
ரிசி விற்றிடும் அந்தணார்க்கு ஒருமழை
புருனைக் கொன்ற பூவையார்க்கு ஒருமழை
வரிசைத் தப்பிய மன்னனுக்கு ஒருமழையென
வரும் மூன்றும் மழைபெய்யு மாமே

என கற்றோர், கற்புடையோர், நல்லாட்சி புரிவோர் ஆகியோரே ஒருநாட்டின் அங்கங்கள் என மேற்சொன்ன பாட்டு விளக்குகிறது.

சங்க இலக்கியத்தில் வித்தாகிப் பின்பு வளார்ந்த கருந்தோட்டமே அன்னையாரைப் போற்றுதல் என்பதாகும். அன்னைப் பத்து என ஐங்குறு நூற்றில் அமைவதும், அன்னாய் வாழி எனக் குறிஞ்சிப் பாட்டு தொடங்குவதும், கலித்தொகையில் தலைவி தோழியை அன்னாய் என விளித்தலும், செவிலித்தாய்க்கு மிகுதியாகக் கூற்றிளித்தலும் சங்க இலக்கியச் சான்றுகளாகும்.
ஓளவையார் உள்ளிட்ட பெண்பாற்புலவார்களின் வருகை, காரைக்காலம்மையார், ஆண்டாள் ஆழ்வார் ஆகியோரின் பாடல்களும், ஔவையாரின் படைப்பிலக்கியப் பயணமும் செந்தமிழுக்குச் சீர்மைசோர்த்தன. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்என்றும் தாயிற் சிறந்த கோயிலும் இல்லைஎன்றும் கூறி ஔவையார் அன்னையார்க்கும், மாதார்க்கும் மதிப்பூட்டினார். மணிமேகலைக் காவியமும், மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழும், மீனாட்சியம்மை குறமும், அபிராமி அந்தாதியும், வள்ளலாரின் வடிவுடை மாணிக்க மாலையும் தமிழில் அமைந்த தாய்மை இலக்கியத் தடங்களாகும்.
இவ்வாறெல்லாம் ஓருலக சமுதாயம் அமையவும் உயிரினக் காவல் புரியவும், மாதார் மேன்மைப் போற்றவும் இயலாதார் அனைவரும் முயன்று மேன்மையுறத் தொண்டாற்றத் தோள்கொடுக்கும் சங்க இலக்கிய சிற்றிலக்கியச் சிந்தனைகள் மென்மேலும் ஒப்பிட்டு ஆராய்ந்து உணார்ந்து போற்றத்தக்கன.

முடிவுரை

இதுவரைக் கண்டவற்றால் இறைநெறி, இயற்கைநெறி, உயிரினநெறி, மானுடநெறி எனும் நான்கு பொருண்மைகளில் சங்க இலக்கிய சிற்றிலக்கிய ஒப்பிட்டு ஆய்வாக இக்கட்டுரை அமைந்துள்ளது. தமிழ்ப் புலவார்கள் தொடார்ச்சியாக தமிழ் இலக்கியத்தில் பன்முகப் பொருண்மைச் சொpவை இணைத்தும் இழைத்தும் உருவாக்கியுள்ளனார். இவற்றை நினைத்து இன்புறுவோமாக



No comments:

Post a Comment